தவளைக்  கண்சோய்: செர்கோஸ்போரா ஜோஸ்னா 
                அறிகுறிகள்: 
             
            
              - இளம் சாம்பல       முதல் சுடர் சாம்பல் நிற புள்ளிகள் தோன்றி விதைகளிலும காணப்படுகிறது
 
              - இலைப்பரப்பை       தாக்கும். ஆனால் தண்டுகள், காய்கள், விதைகளையும் தாக்கும்
 
              - வட்டவடிவில்,       பழுப்பு நிறப்புள்ளிகள் ஆரம்பத்தில் தோன்றி, பின் சாம்பல் நிறத்தில், அடர் நிற       விளிம்புகளுடன் காணப்படும்
 
              - இலைப்புள்ளிகள்       ஒன்று சேர்ந்து பெரிய புள்ளிகளாக மாறும்
 
              - புள்ளிகள்       அதிகமாகும் போது, இலைகள் வாடி, முதிர்வதற்கு முன்பே தொங்கும்
 
              - காய்களில்       உள்ள புள்ளிகள் வட்ட வடிவில், நீளமாக, சிறிதே அமிழ்ந்து, சிவப்பு கலந்த பழுப்பு       நிறத்தில் காணப்படும்
 
           
            கட்டுப்பாடு: 
            
              - ஆரோக்கியமான       (அ) சான்றளிக்கப்பட்ட விதைகளைப் பயன்படுத்த வேண்டும்
 
              - தானியங்களுடன்       பயிர் சுழற்சி செய்யவேண்டும்
 
              - பயிர்க்       குப்பைகளை அறுவடை செய்தபின் முழுவதுமாக அகற்ற வேண்டும்
 
              - தரம் +       கார்பண்டசிம் (2:1) 3 கிராம் / கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்
 
              - மான்கோசெப்       2.5 கிராம்/ லிட்டர் (அ) கார்பண்டசிம் 1 கிராம்/ லிட்டர் என்ற அளவில் தெளிக்க       வேண்டும்
 
              | 
              
               |