சார்கோல் அழுகல் / உவர் வேரழுகல்: மேக்ரோபோமினா  பேசியோலினா 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - நோயுற்ற       செடியின் தண்டுப்பகுதியில் வெள்ளி பூசியது போன்ற வெண்மையான பூசண வளர்ச்சியைக்       காணலாம். 
 
                      - இவ்வளர்ச்சியில்       எண்ணற்ற மிகச்சிறிய கரும்புள்ளிகள் பதிந்திருப்பதைக் கூர்ந்து நோக்கின் மிகத்       தெளிவாகக் காணலாம். 
 
                      - இந்நோய்       வருடம் முழுவதும் தோன்றிய போதிலும் வறட்சி காலங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.       இளம் நாற்றுப் பயிர்களிலும் இலைகளிலும் அறிகுறி காணப்படுகிறது. நோயறற செடியைப்       பிடுங்கிப் பார்த்தால் இதன் வேர்கள் அழுகியிருப்பதைக் காணலாம். 
 
                      - நீர் பாயும்       கோடைக்காலப்பயிர் பயிரிடாத பருவத்தில் இந்நோய் அதிகமாகவும், இப்பயிரை பயிரிடப்படும்       பருவ காலத்தில் இந்நோய் குறைந்தும் காணப்படும். 
 
                      - பூத்தபின்பு       நோய் தோன்றியிருப்பின் காய்களில் குறைந்த எண்ணிக்கையில் பயறுகள் இருப்பதையோ அல்லது       மிகச்சிறிய முற்றாத சுருங்கிய பயறுகள் இருப்பதையோ காணலாம். 
 
                     
                    கட்டுப்பாடு
                    
                      - முந்திய பயிரின் கழிவுகள் ஆழமாகப்  புதைக்கப்பட்டு மக்கச்செய்தால் தோன்றுவது குறையும்.
 
                      -  விதையை டி. விரிடி 4 கிராம்  / கிலோ அல்லது கார்பன்டாசிம் 2 கிராம்  / கிலோ அல்லது சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ்  4 கிராம் / கிலோ என்ற அளவில்  நேர்த்தி செய்தால் நோயின் தாக்கத்தை குறைக்கலாம். 
 
                      | 
                   | 
                 
              |