| பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
           
         
       
        
          
            உதிரிக்கரிப்பூட்டை: ஸ்பெசிலோதீக்கா க்ரூயண்டா
              
                
                  அறிகுறிகள் 
                    
                      -  நோயின்  அறிகுறிகள் கதிர் வந்தவுடன் மட்டுமே தெரியம். 
 
                      - கதிர்களில் மணிகளுக்குப் பதில் நீண்ட  சாம்பல் நிறப்பூசணவித்துக்கள் அடங்கிய பை போன்ற அமைப்புகள் தோன்றுதல், இவை வெடித்து  கருமையான பூசண வித்துக்கள் சிதறுதல்.
 
                     
                    கட்டுப்பாடு 
                    
                      - இந்நோயினால் பாதிக்கப்பட்ட கதிர்களை  சேகரித்து துணியினுள் போட்டு வெண்ணீரில் முழ்கும்படி வைக்கவேண்டும்.
 
                      - மறுதாம்புப் பயிர் செய்வதை தவிர்க்கவும்.
 
                      - இந்நோயைத் தடுப்பதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின்      (விட்டாவேக்ஸ்) அல்லது 4 கிராம் திரம்      என்ற அளவில் கலந்து விதைக்கவேண்டும்.
 
                      | 
                    | 
                 
                | 
           
         
  |