|  சோளக்கதிர் ஈ: கான்டேரினா சொர்கிகோலா | 
  
  
    தாக்குதலின் அறிகுறிகள்: 
      
        - முட்டையிலிருந்து      வெளிவரும் சிகப்புநிற புழுக்கள் பால் பிடிக்கும் கதிர்களை உண்டு சேதப்படும்.சோளக்கதிரின்      மணிகளை அழுத்தினால் சிகப்பு நிற நீர் வெளிவரும்
 
        - தாக்கப்பட்ட      மணிகள் சுருங்கிவிடும்
 
        - கதிர் பதராகிவிடும்.தாக்கப்பட்ட      கதிர்களில் சிறிய துவாரங்கள் காணப்படும்
 
       
      பூச்சியின் விபரம்: 
      
        - ஈ:  சிறிய ஈயானது எளிதில் உடையக் கூடிய வகையினை ஆரஞ்சு நிற வயிற்றுப் பகுதியையும், ஒரு ஜோடி கண்ணாடி போன்ற இறகுகளையும் கொண்டிருக்கும்.
 
        | 
     | 
  
  
    கட்டுப்படுத்தும் முறை:
      
        - விளக்கு பொறி      அமைத்து அந்தப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்
 
        - கதிர் உருவாகிய 18 நாட்கள் கழித்து கீழ்காணும் ஏதேனும் ஒர் மருந்தினை தெளித்து சோளக்கதிர் தாக்குதலைக் குறைக்கலாம்
          
            - கார்பரில் 25 கிலோ / ஹெக்டேர்
 
            - மாலத்தியான் 25 கிலோ / ஹெக்டேர்
 
            - பாசலோன் 25 கிலோ/ ஹெக்டேர்
 
           
         
        - வேப்பங் கொட்டைச் சாறு 5% (அ) மாலத்தையான் 50 EC @ 1600 மி.லி/ஹெக்டேர் (அ) பாசலான் 1150 மி.லி/ஹெக்டேர் 
        
 
        
        - சோளத்தை முடிந்த வரை குறுகிய காலத்தில் விதைத்து பூக்களை சமநிலையில் பூக்க வைப்பதால் சோளக் கதிர் ஈ மற்றும் கதிர் நாவாய்ப்பூச்சி பெருக்கத்தை தடுக்கலாம்
 
              |