| பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            செர்கோஸ்போரா இலைப்  புள்ளி / வெள்ளைப் புள்ளி நோய்: செர்கோஸ்போரா செசாமி, செ. செசாமிக் கோலா 
   | 
           
          
            அறிகுறிகள்: 
                
              
                
                  - இலைகளில் சிறிய, பழுப்பு நிற வடிவ 3  மிமீ விட்டமுடைய புள்ளிகள் சாம்பல் நிறத்தில் நடுவிலும், சுற்றியும் அடர் நிறத்திலும்  காணப்படும்.
 
                  - நோய் தீவிரமாகும் போது, இலைகள் உதிர்ந்து  விடும்.
 
                  - சாதகமான சூழ்நிலையின் போது, இலைக் காம்பு,  தண்டு, விதைகள் வரை இந்தப் புள்ளிகள் பரவும்.
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                
                  - நோய் தாங்கக் கூடிய / எதிர்ப்பு சக்தியுள்ள  இரகங்களான TKG – 21 – ஐ பயிரிட வேண்டும்.
 
                  - எள் + கம்புடன் (3:1) பயிர் சுழற்சி  செய்ய வேண்டும்.
 
                  - பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும்.
 
                  - திரம் (அ) கார்பண்டசிம் 2 கி / கிலோ  என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                  - மான்கோசெப் (0.25%) என்ற அளவில், நோய்  தெரிய ஆரம்பத்தவுடனேயே 3 முறை, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
 
                 
              | 
             
             
               | 
           
               
  |