வேரழுகல் நோய் : ப்யூசேரியம்  ஆக்ஸிஸிபோரம் வகை செசமி 
             
              அறிகுறிகள்
              
              
                - செடியின்  எல்லா நிலைகளிலும் இந்நோய் வருகிறது.
 
                - கீழ்ப்பகுதியில்  உள்ள இலைகள் அதிகம் பாதிக்கின்றன. பின்னர் இவை மேல்நோக்கி செல்கின்றன.
 
                - இலைகள்  மஞ்சளாகவும், மடங்கியும், காய்ந்தும், காணப்படுகிறது. 
 
                - மிகவும்  தீவிரமான நிலையில் எல்லா இலைகளும், உதிர்ந்தும். காய்ந்தும் விடுகின்றன.
 
                - தண்டுப்பகுதியை  பிளந்து பார்த்தால் பழுப்பு நிறம் தோற்றம் காணப்படும்.
 
               
              கட்டுப்பாடு 
            
              - கோடையில்  ஆழமாக உழவேண்டும்.
 
              - பயிர்  சுழற்சி முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
 
              - தொழு  உரத்தை (12.5 டன் / எக்டர்) மண்ணுடன் கலந்து இடவேண்டும்.
 
              - நோயுற்ற  செடிகளை எரித்து மண்ணில் புதைக்கவேண்டும்.
 
              - விதைகளை  டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ அல்லது சூடோமேனாஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம்  / கிலோ அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி  செய்யலாம்.
 
              - கார்பன்டாசிம்  1 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
 
              - டிரைக்கோடெர்மா  விரிடி அல்லது சூடோமோகாஸ் ப்ளூரசன்ஸ் 2.5 கிலோ / எக்டர் என்ற அளில் 50 கிலோ தொழு  உரத்துடன் கலந்த மண்ணில் போடலாம்.
 
              | 
              
               |