எள்ளின் பச்சைப்பூ  நோய்: பைட்டோபிளாஸ்மா 
                அறிகுறிகள் 
            
              - செடியின்  அனைத்து பூக்கும் பகுதிகளும் பச்சை இலைகளாக மாறுகின்றன. பூக்கும் பாகங்களில் நரம்புகளில்  பச்சை நிறம் வெளிர்ந்து காணப்படும்.
 
              - மிகவும்  தீவரமாக பாதித்த பகுதிகளில் பூக்கள் முழுவதுமாக சிறுசிறு இலைகளாக அடர்ந்த நிலையில்,  சிறிய இடைக்கணுக்களைக் கொண்டு, நிறைய சிறிய கிளைகள் வளைந்து காணப்படும்.
 
              - காய்கள்  வளர்ந்தாலும் அதில் விதைகள் காணப்படாது.
 
              - எள்ளின்  பச்சைப்பூ நோய் ஒரோசியஸ் அல்பிங்கடஸ் என்னும் தத்துப்பூச்சியினால் பரவுகிறது.
 
             
            கட்டுப்பாடு 
            
              - ஊடுபயிராக  எள் + துவரை (6:1) என்ற விகிதத்தில் பயிரிடலாம்.
 
              - நோயுற்ற  செடிகளை அழிக்கவேண்டும்.
 
              - மூன்று  முறை டைமீதோயேட் (0.03 சதவிகிதம்) விதைத்த 30,40 மற்றும் 60வது நாட்களில்  தெளித்தால் நோய் பரப்பும் காரணியைக் கட்டுப்படுத்தலாம்.
 
              | 
             |