நாற்றழுகல் / வேரழுகல்: மேக்ரோபோமினா ஃபேசியோலினா 
             
              அறிகுறிகள் 
              
                - இந்நோயைக்  தாக்கக்கூடிய பூசணம் சிறிய நாற்றுக்களையும் அதன் தண்டினையும் மென்மையாக மாற்றி அதை  கீழே விழுந்துவிடச்செய்து, பின்னர் இறந்துவிடச்செய்கிறது.
 
                - முதிர்ந்த  நாற்றுக்களில், பழுப்பு மற்றும் கருப்பு நிறக்கருகல் தோன்றி பெரியதாசிப் பின்னர் தண்டினை  பாதித்துச் செடியை இறந்துவிடச்செய்கின்றன.
 
               
              கட்டுப்பாடு 
            
              - வயலில்  நன்றாக தண்ணீரை வடிகட்டவேண்டும்.
 
              - தாமாமாக  பயிரிடவும்.
 
              - நோயுற்ற  செடியை அழிக்கவேண்டும்.
 
              - விதையை  திரம் + கார்பன்டாசிம் (0.05 சதவிகிதம்) என்ற அளவில் 1:1 என்ற விகிதத்தில் அல்லது  2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
 
              - நோய்  வெளியில் தெரிந்தவுடன், கார்பன்டாசிம் 1 கிராம் / லிட்டர் என்ற அளவில் மண்ணில் தெளிக்கலாம்.
 
              - சூடோமோனஸ்  ப்ளூரசன்ஸ் அல்லது  டிரைக்கோடெர்மா விரிடி  2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.
 
              | 
              
               |