பயிர் பாதுகாப்பு :: சப்போட்டா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு துளைப்பான்: புளேக்கேடரஸ் பெருஜினஸ்

சேதத்தின் அறிகுறி:

  • மரத்தின் கழுத்துப்பட்டை பகுதியில் சிறுசிறு துளைகள் தோன்றும்.
  • மரத்திலிருந்து தேன் போன்ற திரவம் வடிவதை காணலாம்.
  • மரத்தின் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள சிறு துவாரங்களில் இருந்து புழுக்களின் கழிவுகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
  • மரக்கிளையின் குச்சிகள் காய்ந்து படிப்படியாக மரம் முழுவதும் காய்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்:

  • தாய்ப்பூச்சி நடத்தர அளவிலும் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
  • தலை மற்றும் கழுத்துப் பகுதி கரும் பழுப்பு நிறத்தில் அல்லது கருப்பு நிறத்திலும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தாக்கப்பட்ட பகுதிகளையும் காய்ந்த கிளைகளையும் நீக்கி அழித்தவிட வேண்டும்.
  • நிலத்தை சுத்தமாக வைக்க வேண்டும்.
  • தார் மற்றும் மண்ணெண்ணையை 1:2 என்ற கலவையில் தாக்கப்பட்ட பகுதியில் பூசவேண்டும்.
  • மரத்தின் அடிப்பகுதியிலிருந்து 3 அடி உயரத்தில் கார்பரில் 50 டயில்யூபி 20 கிராம் மருந்தினை எடுத்து தாக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பின்னர் மரப்பட்டையை சுரண்டிவிட்டால் வண்டுகள் முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
  • வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கிலோ வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்து துளையை அடைத்து விட வேண்டும்.
  • தாக்கப்பட்ட துளையினுள் ஒரு செல்பாஸ் வில்லையை போட வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015