துரு நோய்: பக்சினியா கார்த்தாமி 
              அறிகுறிகள்: 
               
              
                
                  - நோயின் தாக்கம் ஒரு பக்கமாகவே இருக்கும்.  பழுப்பு நிற புள்ளிகள் இலைகளில் தோன்றி நாற்றுக்கள் இறந்துவிடும்
 
                  - முதிர்ச்சி அடைந்த செடிகளில் தண்டுகளில்  வெட்டுப்பட்டு காணப்படும்
 
                  - இலைப் பரப்பின் மீது 1-2 மி.மீ அளவில்  சிறிய பொடி போன்று பழுப்புநிற புள்ளிகள் தோன்றி, பின் கருப்பு நிறமாக மாறும்
 
                  - துரு நோயின் அறிகுறிகள் இலைகள், பூக்கள்,  பழங்கள் பழுப்பு நிறத்தில் தோன்றும்
 
                  - விதை உருவாகும் சமயத்தில், ஆரஞ்சு கலந்த  மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பின் பழுப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறமாக மாறி,  இலைகள் தொங்கி நாற்றுக்கள் கடைசியில் வாடும்
 
                 
               
              கட்டுப்பாடு: 
              
                - தாழ்வான பகுதிகள், வெள்ளம் உள்ள இடங்களில்  பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்
 
                - நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க  வேண்டும்
 
                - நீர் பாய்ச்சுவதை காலம் தாழ்த்தக் கூடாது
 
                - பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும்
 
                - ஹெக்சகோனசோல் / ப்ரோப்பிகோனசோல்  1 மி.லி / லி (0.05%) (அ) மான்கோசெப் (0.25%) என்ற அளவில் 15 நாட்கள் இடைவெளியில்  ஒன்று (அ) இரண்டு முறை தெளிக்க வேண்டும்
 
                - திரம் (அ) கேப்டான் 3 கி / கிலோ என்ற  அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
 
               
               | 
             
             
                 
               |