ஆல்டர்னேரியா  கருகல்: ஆல்டர்னேரியா கார்த்தாமி 
              அறிகுறிகள்: 
               
              
                
                  - இது ஒரு மோசமான விளைவைத் தரும் நோயாகும்.
 
                  - 2.5 மி.மீ விட்டமுடைய அடர் நிலத்தில்  காய்ந்த புள்ளிகள் வித்திலைகளில் முதலில் தோன்றும்.
 
                  - தண்டிலும் அறிகுறிகள் தோன்றும். அதிகம்  தாக்கப்பட்ட செடிகள் கருகிவிடும்.
 
                  - தண்டுகளில் பழுப்பு நிற மாற்றம் தோன்றும்  அடர் பழுப்பு நிறப் புள்ளிகள் 1 செ.மீ அளவுடைய அடர்ந்த வளையங்களும் இலைகளில் தோன்றி,  பின் பெரிய புள்ளிகளாக மாறும்.
 
                  - விதைகளும் தாக்கப்படும். அடர் நிறத்தில்  நீரில் அமிழ்ந்தது போன்ற புள்ளிகள் தோன்றும். சில சமயங்களில் அழுகும், சிறிய நாற்றுக்களில்  நாற்றழுகல் நோய் தோன்றும்.
 
                 
               
              கட்டுப்பாடு: 
            
              
                - தாழ்வான பகுதிகள், வெள்ளம் சூழக்கூடிய  பகுதிகளில் பயிரிடக்கூடாது
 
                - நோய் தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க  வேண்டும்
 
                - கார்பண்டசிம் 1.5 கிராம் / கிலோ விதை  என்ற அளவில் விதை நேரத்தி செய்ய வேண்டும்
 
                - மான்கோசெப் (0.25%) நோய் தெரிய ஆரம்பித்தவுடனே  தெளிக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து நோயின் தீவிரத்தைப் பொறுத்து தெளிக்க வேண்டும்.
 
               
  | 
              
                
               |