| பயிர் பாதுகாப்பு  ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  சேம்பப்பூ அசுவினி: யுரோலூகான் கார்த்தாமி  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - குஞ்சுகளும், வளர்ந்த      பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
 
                      - தாக்கப்பட்ட இலைகள்      சுருண்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 
                      - குஞ்சுகள் கழிவுநீர்      போன்ற திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்யும்
 
                      - தாக்கப்பட்ட இலைகள்      கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்
 
                      - இறுதியாக செடிகள் காய்ந்து      விடும்
 
                     
                    பூச்சியின் அடையாளம்: 
                    
                      - குஞ்சுகள்:  சிகப்பு கலந்த      பழுப்பு நிறத்தில் இருக்கும்
 
                      - அசுவினி:  கருமை நிறமுடையது,      வயிற்று பகுதிக்குக் கீழே இரண்டு குழாய் போன்ற நீட்சிகளைக் கொண்டிருக்கும்
 
                    | 
                   
  | 
                 
                
                  | 
                     கட்டுப்பாடு:   
                    
                      - காலம் கடந்து விதைத்தலைக்      தவிர்த்தல் வேண்டும்
 
                      - தேவைக்கு அதிகமான நைட்ரஜன்      உரங்களைத் தவிர்க்க வேண்டும்
 
                      - மக்காச் சோளம், சோளம் ஆகியவற்றை ஊடுபயிராக      3 வரிகளுக்கு இடை இடையில் நடலாம்
 
                      - செடிக்கு 1 - 2 கிரைசோபெர்லா      புழுவை வெளியிட்டு அசுவினியை அழிக்கலாம்
 
                      - இயற்கை எதிரிகளான ஏபிலினஸ்,      மைக்ரோமஸ் ஆகியவற்றை பயன்படுத்தி அசுவினியின்  எண்ணிக்கையைக் குறைக்கலாம்
 
                      - நடவு செய்த 60 நாட்கள்      கழித்து டைமீத்தேயேட் 750 மிலி மருந்தை எக்டர்க்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து      தெளித்து அசுவினியின் தாக்குதலைக் குறைக்கலாம்
 
                      | 
                 
               
 | 
           
         
  |