பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
முள் வண்டு / ஹிஸ்பா வண்டு : டைகிளாடிஸ்பா ஆர்மிஜெரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இலைகளைத் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காணலாம்
  • இலைகளின் மேற்புறத்தில் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்
  • இலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளைநிறத் திட்டுக்கள் தோன்றும்.
  • புழுக்கள் இலைகளைத் துளைத்து இலையின் நுனிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தும்.
  • சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி விழுந்து விடும்.
  • தீவிரத் தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சிதரும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: பொதுவாக இலையின் நுனியை நோக்கி இளம் இலைகளின் சிறு பிளவு/வெடிப்புகளுக்குள் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
  • புழு: புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில், தட்டையாகக் காணப்படும். இலைகளை துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப்புழுவாகிறது.
  • அந்துப்பூச்சி: வண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீல நிறம் அல்லது கருப்பு நிறமான உடலுடன், உடல் முழுவதும் முள்ளுடன் 1/6" நீளமும், 1/8" அகலத்துடனும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • கார்போபியுரான் 3% 50 கி.கி/ஹெக்டேர்
    • குளோரோபைரிபாஸ் 20% EC 1250 மி.லி/ஹெக்டேர்
    • மாலத்தையான்50%EC 1150 மி.லி/ஹெக்டேர்
    • ட்ரைஅசோபாஸ் 40% EC 625-1250 மி.லி/ஹெக்டேர்


புழு முதிர் பூச்சி
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015