பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெட்டுக்கிளி: கைரோகிளைப்பஸ் பானியான்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • நாற்றுக்கள் மற்றும் இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும்
  • கதிர் பருவத்தில் தண்டுகளை வெட்டி உண்ணும்
  • இலை நரம்பை தவிர, இலை முழுவதையும் உண்டுவிடும்
  • இலை பரப்பின் மேல் இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் 30-40 எண்ணிக்கையில் கூட்டமாக இடப்பட்டிருக்கும். பருவ மழைப் பொழிவு தொடக்கத்தின் போது இந்த முட்டைகள் வெளிவந்து விடும். முட்டைகள் மஞ்சள் நிறத்தில், நீர்ப்புகாதவாறு பசை போன்ற பொருளால் மூடப்பட்டிருக்கும்.
  • இளங்குஞ்சுகள்: இளங்குஞ்சுகள் புற்கள் மற்றும் நெற்பயிரினை உண்கின்றன.
  • அந்துப்பூச்சி:  ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் இளம் குஞ்சுகள் வளர்ந்து முதிர்ப்பூச்சிகளாகின்றன
  • கைரோகிலைப்பஸ் பானியன் (பெருவெட்டுக்கிளி) 1½ இன்ச் நீளம் கொண்டது. முன் மார்பு பாகத்தின் மேல் மூன்று கருநிறக் குறுக்கு கோடுகள் காணப்படும். இதனால் பூச்சியை எளிதில் கண்டறியலாம்.
  • ஆக்ஸ்யா நிடிடுலா (சிறு வெட்டுக்கிளி) 1 இன்ச் நீளமுடன் முன் மார்பு பாகத்தின் இரு பக்கங்களிலும் நீளவாட்டில் பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை
  • வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்

 

ஒழுங்கற்றவாறு இலைகளின் விளிம்பு கடிக்கப்பட்டிருக்கும்
நீள்கொம்புடைய வெட்டுக்கிளி வெட்டுக்கிளிகள் வயலில் காணப்படும
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015