பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கம்பளிப்புழு: ஸாலிஸ் பென்னாடுலா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இரவு நேரத்திற்குள் நாற்றங்காலில் உள்ள பயிர்கள் முழுவதையும் உண்டு விடும்.
  • நெற்பயிரின் இலை விளிம்புகளை புழுக்கள் கடித்து உண்ணும்.
  • இலைகளை ஒழுங்கற்ற முறையில் ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும்.
  • நாற்றுக்களை ஒழுங்கற்றவாறு உண்டுவிடும்.
  • இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இலைகளின் மீது கொத்தாக மஞ்சள் நிற முடிகளுடன் கூடிய முட்டைகளை இடும்.
  • புழு: புழுக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற வரிகளுடன், ஆரஞ்சு நிற தலையுடன் காணப்படும். உடல் முழுவதும் உரோமங்கள் இருக்கும். இதில் நுனிப்பகுதியில் இரண்டும், பின்பகுதியில் இரண்டும் தெளிவாக தெரியும்.
  • கூட்டுப்புழு: மஞ்சள் நிற பட்டு போன்ற கூட்டுடன் இலையின் மீதிருக்கும்.
  • அந்துப்பூச்சி: அந்துப்பூச்சிகள் இளம் மஞ்சள் நிறத்தில் இரு உணர் கொம்புகளுடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்

புழுக்கள் இலைகளை ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும் புழுக்கள் இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும்
கம்பளிப்புழு முதிர்பூச்சி
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015