தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இலைகள்      நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 
                      - இப்பூச்சிகள்      துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன
 
                      - பயிரின்      வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்
 
                      - பயிர்      வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல.
 
                     
                    பூச்சியின் விபரம் 
                    
                      - முட்டை: பச்சையான      ஒளிகசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை      அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக      முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
 
                      - புழு: இளம்      பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக      இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சி வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு      18-20 நாட்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது.
 
                      - அந்துப்பூச்சி: இவை      3-5 மி.மீ நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன்,      கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்டக்கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின்      முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிற புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப்      பூச்சியில் அவை கிடையாது. ஜூலை-செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன்      விளங்கும்.பெண் இனப்பூச்சிகள் 50-55 நாட்கள் வரை வாழக் கூடியது.
 
                    | 
                  
                    
                      
                          | 
                         | 
                         
                      
                        |   | 
                         மஞ்சள் நிறமான இலைகள் | 
                         
                     
                   
 |