பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெட்டுப்புழு: ஸ்போடப்டிரா மெளரிஸியா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் நாற்றுக்களை அதிகளவில் வெட்டிவிடும்
  • அதிக தாக்குதலின் போது மாடு புல் மேய்ந்த நிலம் போல் காட்சியளிக்கும்
  • புழுக்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக அருகேயுள்ள வயலுக்குச் சென்று திவிரமாக தாக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் வட்டமாக, பால் வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற முடிகளுடன் கூட்டமாக இடப்பட்டிருக்கும்.
  • புழு: புழுக்களின் இளம் வளர்ச்சி நிலையில் மங்கிய பச்சை நிறத்திலும், மேல்புறம் மற்றும் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற கோடுகளுடனும் காணப்படும். பின்னர் அவை அரை வட்ட வடிவமாக, அடர்பழுப்பு அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில், பக்கவாட்டில் கருப்புப் புள்ளிகளுடனும் காணப்படும்.
  • கூட்டுப்புழு: மண்ணில் கூட்டுப்புழுவை உருவாக்குகின்றன. அடர்பழுப்பு நிறத்தில் 16-17 மி.மீ நீளத்துடன் காணப்படும்.
  • அந்துப்பூச்சி: முதிர் அந்துப்பூச்சிகள் நடுத்தர அளவில், பருமனாக அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கைகளில் நன்கு தெரிகிற முக்கோண வடிவ கரும்புள்ளிகள் காணப்படும். பின் இறக்கைகள் பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில், ஓரங்களில் மெல்லிய கருப்பு நிறத்துடன் காணப்படும்.
புழு கூட்டுப்புழு முதிர்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • நாற்றங்காலிலிருந்து நீரை வடித்து விட்டு, குளோரிபைரிபஸ் 20 EC 80 மி.லியை 20 லி தண்ணீரில் கலந்து 8 சென்ட் அளவுள்ள நாற்ங்காலில் தெளிக்கலாம்
  • வயலில் வாத்துக்களை விடுவதால் இப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றகாலில் தண்ணீர் தேங்கி இருக்குமாது செய்யும் போது மறைந்திருக்கும் புழுவானாது வெளியே வருவாதால் அது பறவைக்கு உணவாகிறது.
  • நீர்பாசனம் செய்யும் போது மண்ணெய்யை கலப்பதால் புழுயானது மூச்சு தினறி இரக்க நேரிடும்.
  • மாலை நேரத்தில் நாற்ங்காளல் தண்ணீரை வடித்துவிட்டு குளோரோனபரிபாஸ் 20 EC 80 மி.லி என்ற அளவில் தெளிக்கவும்.
    நாற்றங்காலில் நீரை தேக்குவதால் புழுக்களை வெளிக்கொண்டு வரலாம் பாசன நீரில் மண்ணெண்ணெய் கலக்கவும்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015