பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும்
  • தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.
  • நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.
  • குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.
  • பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்

காய்ந்த நடுக்குருத்து முட்டை திரள்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் பாலேடு போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும். இவை கூட்டமான திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும்.
  • புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில் கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு: வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால் நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின் உள்ளேயும் ஏற்படும்.
  • அந்துப்பூச்சி: 
  • பெண் அந்துப்பூச்சி: முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும். 
    ஆண் அந்துப்பூச்சி: சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது.
 

சில்லோ பாலிக்ரைசிஸ் 

புழு  
முதிர்ப்பூச்சி

சில்லோ சப்ரசாலிஸ் 

புழு 
முதிர்ப்பூச்சி
சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்
புழு முதிர்ப்பூச்சி
செசாமியா  இன்பிரென்ஸ்
புழு  
முதிர்ப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: 25%"குருத்து காய்தல்" அல்லது 2 முட்டை குவியில்/மீட்டர்

  • முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும்.
  • வேப்பக் கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
  • நாற்று நடும் போது நாற்றின் நூனியை கிள்ளி விடுவதால் தண்டுத் துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015