பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டு ஈ: ஓபியோமையா பேசோலி

அறிகுறிகள்:

  • இளம் இலைகள் மஞ்சளாகி தொங்கிவிடும்
  • இளம் செடிகள் கடுமையாக பாதிக்கப்படும்
  • ஈ மற்றும்  புழுக்கள் இருக்கும்  தண்டுகள் தடித்து, உடைய ஆரம்பிக்கும்.
  • முதிர்ச்சியடைந்த தாவரங்கள் வளர்ச்சி குறைந்து காணப்படுகின்றன, ஆனால் இறப்பதில்லை .
   

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டையின் காலம் 3 நாட்கள்.
  • புழு: புழுவின்  காலம் 5-6 நாட்கள். கூட்டு புழு, புழுவின்  வரிபல்லத்தில்  காணப்படும்
  • பூச்சி: தாய்ப்பூச்சி கருப்பு நிறத்தில்  சிறிதாக  இருக்கும்.  ஒரு பெண் பூச்சி 38-79 முட்டைகள் வரை தனிதனியாக  காய்களில் அல்லது  பூவின்  மீது  இடும்.
புழு தாய்ப்பூச்சி

கட்டுப்பாடு:

  • நன்மை தரும் பூச்சிகளான  யுடிரஸ்லிவிடஸ் , யுரிடோமா வகைகள்மற்றும்   யுடிரஸ்அக்ரோமைசேவை  பாதுகாக்க வேண்டும்.
  • க்லோர்ப்ய்ரிபாஸ் 4 மிலி/கி விதை நேர்த்தி  செயுது தண்டு ஈயை குறைக்கலாம்.
  • கார்பரில் 50 டபிள்யு பி 1.5 கிலோ 700 லி தண்ணீரில்  கலந்து ஒரு ஹெக்டருக்கு  தெளிக்கவும்.
  • கார்போபுரன் 3 ஜி @ 15 kg/ஹெக்டர்  மண்ணில்  இட வேண்டும்.
  • இமிடகார்கார்போலைட் 70% WG 500 மிலி / எக்டர் முலைப்புகு  ஒரு வாரம் பின், இரண்டாவது சுற்று 10 நாட்கள் முதல் சுற்றுக்கு  பின்  அல்லது வேப்பம் கொட்டை சாறு 5% தெளிக்க வேண்டும்.
  • சரியான் நேரத்தில் பயிரிடுவது மூலம் பாதிப்பை தடுக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015