வேர் அழுகல் நோய்: மேக்ரோபோமினா பேசியோலினா 
         
            அறிகுறிகள்               
            இந்நோய் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இலைகள் வாடத் தொடங்குகின்றன.  பின்பு இலைகள் காய்ந்து செடியும் காய்ந்து விடுகின்றன.  நோய் தீவிரமாகப் பரவினால் தாக்கப்பட்ட செடிகளில் ஆணி வேரைத் தவிர மற்ற வேர்கள் யாவும் அழுகிவிடுகின்றன.  ஆணி வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார் நாராக உரிந்து விடுகிறது.  நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்துவிடும் தாக்கப்பட்ட வேர்ப்பகுதியில் இழை முடிச்சுகள் இணைந்திருக்கும்.  
            பரவுதல் 
            இப்பூஞ்சாணங்கள் மண்ணில் தங்கியிருந்து பரவும் திறனுடையது.  இந்நோய் விதை, காற்று, பாசனநீர் ஆகியவை மூலம் பரவுகின்றது.  இப்பூஞ்சாணம், காய்கறிச் செடிகள், எண்ணெய் வித்துப்பயிர்கள் பயறுவகைப் பயிர்கள் ஆகியவற்றிலும் நோய்களை உண்டாக்குகின்றன. 
 |