பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வேர் அசுவினி: டெட்ரானியூரா நைகிரி அப்டோமினாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்கப்பட்ட செடிகள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி குன்றிவிடும்.
  • ஆங்காங்கே செடிகள் திட்டுதிட்டாக, வாடி காய்ந்து காணப்படும்.
  • செடிகளில் தேன்துளி, தத்துப்பூச்சி கழிவுப் பொருட்களும், எறும்புகளும் காணப்படும். புல்களிலும் இந்த அறிகுறி காணப்படும்.
0
செடியின் அடிப்புறத்தில் அசுவினிகள் காணப்படும் தேன் சுரப்பு மற்றும் எறும்புகள் செடிகள் வாடி காய்ந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • அசுவினி: வட்ட வடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்
இளம் பூச்சி முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • கார்பரில் 50 WP @ 1 கிலோ/ஹெக்டேர் (500 லிட்டர் கரைசல்/ஹெக்டேர்) தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015