பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மஞ்சள் அசுவினி : சைசபீ்ஸ் கிராமினம்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சும்.
  • இலைகள் மஞ்சளடைந்து, பயிர்கள் வளர்ச்சி குன்றி விடும்.
  • பயிர்கள் ஆங்காங்கே, வாடி, காய்ந்து விடும்.
  • அசுவுணி தேன்துளி கழிவுப்பொருள் மற்றும் எறும்புகள் பயிர்களில் இருக்கும்.
பயிர்கள் வளர்ச்சி குன்றிவிடும் இலைகள் மஞ்சளாகிவிடும் தேன் சுரப்பு மற்றும் எறும்புகள் முதிர் பூச்சி

பூச்சியின் விபரம்:

  • முதிர் பூச்சி: பச்சை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • மீதைல் டெமட்டான் 25 EC @ 20 மில்லி/ஹெக்டேர் (அ) டைமெத்தோயேட் 30 EC @ 20 மில்லி/ஹெக்டேர் தெளிக்க வேண்டும். (10 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிக அளவு கொண்ட தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015