பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கேழ்வரகு தத்துப்பூச்சி : சிக்காடுலினா பைபங்டெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகள் இலைகள் மற்றும் தண்டின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சி விடும்.
  • இலைகள் மஞ்சளடைந்து செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும்.
  • கேழ்வரகு தேமல் வைரஸ் நோயை பரப்புகிறது.
இலைகள் மஞ்சளாகி வளர்ச்சி குன்றி காணப்படும் செடியில் தத்துப்பூச்சி காணப்படும் முதிர் பூச்சி

பூச்சியின் விபரம்:

  • குஞ்சு: வெளிர் பச்சை நிறத்தில் கண்ணாடி போன்று இருக்கும். குறுக்காக நடந்து கொண்டிருக்கும். குஞ்சுக்காலம் 7-9 நாட்கள் ஆகும்.
  • முதிர் பூச்சி: சிறிய, பழுப்பு நிறத்தில், உளி வடிவத்தில் குஞ்சுகள் இருக்கும். முதிர் பூச்சி 2-3 வாரங்கள் வரை இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • டைமெத்தோயேட் 30 EC @ 1.7 மில்லி/லிட்டர் (அ) பாஸ்பமிடான் 100 EC 0.5 மில்லி/லிட்டர் தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015