பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இளஞ்சிவப்பு தண்டு துளைப்பான்: செசாமியா இன்பெரன்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைச் சுருள்களில் புழுக்கள் தங்கி, நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் ஏற்படும்.
  • அடி இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி, பிறகு காய்ந்து விடும்.
  • துளையிடப்பட்ட துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்துக்கொண்டிருக்கும்.
  • கதிர் வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை நிறத்தில் தெளிவாகத் தெரியும். இதனால் இந்த கதிர்களை வயலில் எளிதாக கண்டறிய முடியும்.
துளைக்குழிகள் பூச்சிகளின் கழிவுகளால் அடைக்கப்பட்டிருக்கும் காய்ந்த நடுக்குருத்து காணப்படும் தண்டில் மிகச்சிறிய ஓட்டைகள் காணப்படும் வெண்கதிர் அறிகுறி

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இலைகள் மற்றும் தண்டுகளில் பால் வெள்ளை நிறத்தில், உருண்டையான வடிவத்தில் கொத்து கொத்தாக முட்டைகள் காணப்படும். முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்.
  • புழு: இளஞ்சிவப்பு பழுப்பு நிறத்தில் மென்மையாக உருளை வடிவத்தில், கருஞ்சிவப்பு நிறத் தலையுடன் கூடிய புழுக்கள் காணப்படும். புழுப்பருவத்தின் காலம் 22 நாட்கள் ஆகும்.
  • கூட்டுப்புழு: தண்டுகளில் அடர் பழுப்பு நிறத்தில், தலையில் ஊதா புள்ளியுடன் கூடிய கூட்டுப்புழுக்கள் காணப்படும். கூட்டுப்புழுக்களின் காலம் 8 நாட்கள் ஆகும்.
  • பூச்சி: நடுத்தர அளவிலான, மங்கிய மஞ்சள் பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் பயிரில் காணப்படும். முன் இறகுகள் லேசான பழுப்பு நிறத்தில், இரண்டு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். பின் இறகுகள், வெள்ளை நிறத்தில், நரம்புகளில் மஞ்சள் நிற செதில்களுடன் காணப்படும்.
முட்டை புழு கூட்டுப்புழு முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • போரேட் 10% CG / எக்டர் என்ற வீதம் 20 நாட்கள் இடைவெளியில் முளைப்பிற்கு பிறகு தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015