தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இலைச்      சுருள்களில் புழுக்கள் தங்கி, நடு இலைகளை உண்ணுவதால் துவாரங்கள் ஏற்படும்.
 
                      - அடி      இலைகள் பச்சையாக இருந்தாலும், நடுக்குருத்து மட்டும் பழுப்பு நிறமாக மாறி, பிறகு      காய்ந்து விடும்.
 
                      - துளையிடப்பட்ட      துவாரங்களில் பூச்சிகளின் கழிவுகள் அடைத்துக்கொண்டிருக்கும்.
 
                      - கதிர்      வெளிவரும் பருவத்தில் வெண்கதிர் அறிகுறி தோன்றும். கதிர் மணிகள் நிரம்பாமல் வெள்ளை      நிறத்தில் தெளிவாகத் தெரியும். இதனால் இந்த கதிர்களை வயலில் எளிதாக கண்டறிய முடியும்.
 
                     
                      
                          | 
                          | 
                          | 
                          | 
                       
                      
                        | துளைக்குழிகள் பூச்சிகளின் கழிவுகளால் அடைக்கப்பட்டிருக்கும் | 
                        காய்ந்த நடுக்குருத்து காணப்படும் | 
                        தண்டில் மிகச்சிறிய ஓட்டைகள் காணப்படும் | 
                        வெண்கதிர் அறிகுறி | 
                       
                     
                 
பூச்சியின் விபரம்: 
  - முட்டை: இலைகள் மற்றும்      தண்டுகளில் பால் வெள்ளை நிறத்தில், உருண்டையான வடிவத்தில் கொத்து கொத்தாக முட்டைகள்      காணப்படும். முட்டை வளர்ச்சி காலம் 8 நாட்கள் ஆகும்.
 
  - புழு: இளஞ்சிவப்பு பழுப்பு      நிறத்தில் மென்மையாக உருளை வடிவத்தில், கருஞ்சிவப்பு நிறத் தலையுடன் கூடிய புழுக்கள்      காணப்படும். புழுப்பருவத்தின் காலம் 22 நாட்கள் ஆகும்.
 
  - கூட்டுப்புழு: தண்டுகளில் அடர் பழுப்பு      நிறத்தில், தலையில் ஊதா புள்ளியுடன் கூடிய கூட்டுப்புழுக்கள் காணப்படும். கூட்டுப்புழுக்களின்      காலம் 8 நாட்கள் ஆகும்.
 
  - பூச்சி: நடுத்தர அளவிலான, மங்கிய மஞ்சள் பழுப்பு      நிற அந்துப்பூச்சிகள் பயிரில் காணப்படும். முன் இறகுகள் லேசான பழுப்பு நிறத்தில்,      இரண்டு கருப்பு புள்ளிகளுடன் காணப்படும். பின் இறகுகள், வெள்ளை நிறத்தில், நரம்புகளில்      மஞ்சள் நிற செதில்களுடன் காணப்படும்.
 
 
  
      | 
      | 
      | 
      | 
   
  
    | முட்டை | 
    புழு | 
    கூட்டுப்புழு | 
    முதிர் பூச்சி | 
   
 
கட்டுப்படுத்தும் முறைகள்: 
  - போரேட் 10% CG / எக்டர் என்ற வீதம் 20 நாட்கள் இடைவெளியில் முளைப்பிற்கு பிறகு தெளிக்க வேண்டும்.
 
  |