| பயிர் பாதுகாப்பு  :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            | உருளைக்கிழங்கு  துளைப்பான் : தோரிமோயா ஒப்பர்குலெல்லா  | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இப்பூச்சி      கிழங்குகளை வயல்களிலும், சேமிப்புக் கிடங்கில் தாக்குகிறது.
 
                - இலைகள்,      இளம்தண்டு மற்றும் கிழங்குகளை துளைத்துச் சென்று சேதம் விளைவிக்கும்.
 
                - கிழங்குகளில்      கண் பகுதிகளில் நூலாம்படைகளை உருவாக்கி சேதப்படுத்தும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: பெண் அந்துப்பூச்சி இலையின் அடிபரப்பு      மற்றும் கிழங்குகளின் மீது முட்டை குவியல்களை இடும்
 
                - புழு: மஞ்சள் நிறத்துடன் கரும்பழுப்பு நிறத்தலையுடன்      இருக்கும்
 
                - கூட்டுப்புழு: இலை மற்றும் மண் கட்டிகளில் பட்டுக்கூட்டினில்      கூட்டுப்புழு இருக்கும்
 
                - பூச்சி:  அந்துப்பூச்சி கரும்பழுப்பு நிறத்துடன்      இருக்கும். முன் இறகுக்குகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்துடனும் பின் இறக்கைகள்      அழுக்கடைந்த வெண்ணிறத்திலும் இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - தரமான கிழங்குகளை தேர்வு செய்து நடவும்
 
                - மேற்பரப்பில் கிழங்குகள் நடவுசெய்வதை தவிர்க்கவும்
 
                - கிழங்குகளை 10 - 15 செ.மீ ஆழத்தில் நடவும்
 
                - இனக்கவர்ச்சிப்பொறி ஹெக்டேருக்கு 15 வைக்கவும்
 
                - வயல்களில் புச்சி தாக்கிய கிழங்குகளை சேகரித்து அமிக்கவும்
 
                - அறுவடை செய்த கிழங்குகளை வயல்களில் இரவு நேரங்களில் விட்டுவைக்க கூடாது
 
                - மிளகாய், வெங்காயம் மற்றும் பட்டானியை ஊடுப்பயிராக பயிரிடவும்
 
                - நடவு செய்து 60 நாள் கழித்து கிழங்குகளுக்கு மண் அணைக்கவும். இதன் மூலம் தாய் அந்துப்புச்சி கிழங்குகளின் மீது முட்டையிடுவதை தவிர்க்கலாம்
 
                - சேப்புக் கிடங்கில் கிழங்கின் மேற்பரப்பில் லேண்டானா மற்றும் யுபேட்டோரியம் செடிகள், கிளைகளைக் கொண்டு மூடுவதால் பூச்சியானது கிழங்கில் முட்டையிடாமல் விரட்டியடிக்கப்படுகிறது
 
                - முட்டை-புழு ஒட்டுண்ணியான செலேனஸ் பிளாக்பானியை ஹெக்டேருக்கு 30,000 அளவு இருமுறை நடவு செய்து 40 மற்றும் 70 நாட்கள் கழித்து விடவும்
 
                - வேப்பங்கொட்டை வடிநீர் @ 5 சதம் அல்லது குயினல்ஃபாஸ் @2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
 
                - பெசில்லஸ் துருன்ஜியென்ஸிஸ் @1 கிராம்/ஹெக்டேர் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம்
 
                | 
            
              
                
                    | 
                 
                
                  | புழு | 
                 
              | 
           
          
              | 
           
          
            | பூச்சி | 
           
          
              | 
           
         
     
 |