பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
அனார்  வண்ணத்துப்பூச்சி: டியோடிரிக்ஸ்
அறிகுறிகள்
  • இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும்.
  • பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
  • பழங்கள் அழுகும், உதிர்ந்துவிடும்

பூச்சியின் விபரம்

  • புழு – அடர் பழுப்பு நிறத்தில், சிறியதாக, தடித்து, சிறிய உரோமங்களால் சூழப்பட்டிருக்கும்.
  • பூச்சி – நீலம் கலந்த பழுப்பு நிற வண்ணத்துப் பூச்சி
  • பெண் பூச்சி – முன்னிறக்கையில் ‘V’ வடிவ திட்டு காணப்படும்.

கட்டுப்பாடு

  • சேதமடைந்த பழங்களை சேகரித்து அழித்தல்
  • சாகுபடியை சுத்தமாக மேற்கொள்ளுதல்
  • நோய் தாங்கிக் கொள்ளக் கூடிய இரகங்களை பயிரிடுதல்.
  • பொருளாதார சேதநிலை – 5 முட்டைகள்/செடி
  • பழங்களை பாலித்தீன் பைகளில் கட்டி மூடிவிடவேண்டும்.
  • விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைக்கலாம்.
  • மாலத்தியான் 50 கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30 கிகி 0.06% பூக்கள் உருவாகும் போது, பழங்கள் உருவாகும் போதும் தெளிக்க வேண்டும்.
  • பூக்கள் நிலையில், வேப்பங்கொட்டை சாறு 5% (அ) வேம்பு கலந்த கரைசல் 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • டைமெத்தோயேட் 30 கிகி 1.5 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
  • டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் 1 லட்சம் /ஏக்கர் என்ற அளவில் வயலில் வெளிவிடுதல்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015