பைட்டோப்தோரா தூர் அழுகல் /புதை  வாடல் நோய் - பைட்டோப்தோரா கேப்சிசி 
              அறிகுறிகள்:
              
              அ.பின்னோக்கிக்  காய்தல்: 
                - எந்த தருணத்திலும் மேல் உள்ள கிளைகள்  பாதிக்கப்படும். இதனால் கிளைகள் நிறம் மாறியும், கிளைகளின் மேற்புறம் மற்றும் கீழ்புறம்  அழுகியும் பின்னோக்கிக் காய்ந்து விடக் கூடும்.
 
               
  
      | 
      | 
      | 
      | 
   
  
    | பின்னோக்கிக்  காய்தல | 
    பாதிக்கப்பட்ட இலை | 
    கழுத்துப்பட்டை அழுகல் | 
    வேர்  அழுகல் | 
   
 
 
              ஆ.தூர்  அழுகல் அல்லது கழுத்துப்பட்டை அழுகல்: 
                - நிலமட்டத்திற்கு அருகில்  உள்ள தண்டுப்பகுதியில் நோய் தாக்கி பின் அழுகி இரண்டில் இருந்து மூன்று நாட்களுக்குள்  கொடிகள் பாதிக்கப்பட்டு இறந்துவிடும்
 
                - பாதிக்கப்பட்ட பகுதிகளில்  இருந்து கெட்ட துருநாற்றத்தை ஏற்படுத்தும். அடிப்பகுதியில் உள்ள தண்டுகள் முதலில் காய்ந்து  பின் வேர் வரை பரவும்
 
               
              இ.வேர்  அழுகல்: 
                - நோய் தாக்குதல் முதலில் முக்கிய வேர்  அல்லது ஊட்டு வேரிரை தாக்கும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்து விடும்
 
               
              கட்டுப்பாடு: 
                - திடமான நாற்றங்காலை தேர்வு செய்யவும்
 
                - நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும்
 
                - பாதிக்கப்பட்ட செடியை அகற்றிய பின்  1% பார்டியாக்ஸ் கலவையை மண்ணை சொட்டு சொட்டாக நனைக்கவும்
 
                - 1% போர்டியாக்ஸ் கலவை (அ) 0.25% சி.ஒ.சி.(அ)  0.3% அல்லைட்டை தெளிக்கவும்
 
                - வேம்பு கேக் மற்றும் ட்ரைக்கோடெர்மா  விரிடி (அ)பி ப்ளோரோசென்ஸை மண்ணில் கலந்து இடவும்
 
                 
              Image source: http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/pepper.htm  |