பயிர் பாதுகாப்பு :: பேரிக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தண்டு துளைப்பான்: சாகைட்ராசஸ் மலபேரிக்கஸ்

சேதத்தின் அறிகுறி

  • அடித்தண்டுப் பகுதியில் துளையிருக்கும், கழிவுப்பொருட்கள் அதன் கீழே கொட்டிக் கிடக்கும். மரங்கள் வாடும்.

பூச்சி

  • புழு தடிமனாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். அந்துப்பூச்சி வெண் பழுப்பு நிறமாக பெரியதாகக் காணப்படும்.

தடுப்பு
  • சேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி விட வேண்டும்.
  • பூச்சி எதிர்ப்புத்திறனுடைய மர ரகங்களை பயிரிட வேண்டும் (நீலம், கிமாயூதீன்).
  • வண்டு உண்ணக்கூடிய மாற்று பயிர்வகைகளை அகற்ற வேண்டும்.
  • வண்ணம் பூசுதல் 20 கி காப்பரில் பவுடரை 1 லி தண்ணீரில் கலந்து மரத்தின் அடியிலிருந்து 3 அடி உயரத்தில் வண்ணம் பூச வேண்டும். இதனால் பெண் வண்டின் முட்டையிடும் தன்மை தடுக்கப்படுகிறது.
  • சேதம் அதிகமாகும் தருவாயில் காப்பர் ஆக்ஷிகுளோரைடு பசையை மரத்தின் அடிப்பாகத்தில் தடவ வேண்டும்.
  • வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு மோனோகுரோட்டாபாஸ் 10 லிருந்து 20 மிலி வரை எடுத்து பாதிக்கப்பட்ட துளையினுள் செலுத்த வேண்டும்
  • கார்போபீயூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கி வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்த துளையை அடைத்து விட வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015