| பயிர் பாதுகாப்பு  :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
            
              | பாக்கனோ நோய் (அல்லது) தூர் அழுகல் நோய்: ஜிபரெல்லா ஃபூஜிகோரி | 
             
           
         
       
        
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - நோய் தாக்கப்படட       பயிர்கள் நாற்றங்காலிலும் வயலிலும் வழக்கத்திற்கு மாறான உயரத்துடன் காணப்படும்.
 
                   - பயிர்கள்       மெலிந்து, மஞ்சள் கலந்த பச்சை நிற இலைகளுடனும், வெளிரிய பச்சை நிற கண்ணாடி இலைகளையும்       கொண்டிருக்கும்.
 
                   - நாற்றுக்கள்       தூர்விடும் பருவத்தில் காய்ந்துவிடும்.
 
                   - பயிரில்       தூர்கள் குறைந்தும், இலைகள் காய்ந்தும் காணப்படும்.
 
                   - இந்நோய்       தாக்கப்பட்ட பயிர்களில் பூக்காமலும், கதிர்கள் அறைகுறையாகவும், பூக்கள் மலட்டுத்       தன்மையுடனும் மணிகள் நிரம்பப்படாமலும் இருக்கும். விதைப்பாத்திகளில் நோய் தாக்கப்பட்ட       நாற்றுக்கள் வேர்களில் புள்ளிகளுடன் காணப்படும்.
 
                   - இந்நாற்றுக்கள்       நடவு செய்வதற்கு முன்னோ அல்லது நடவிற்குப் பின்னரோ இறந்துவிடும்.
 
              | 
            
              
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                | பச்சைநிற குருத்து இலைகள் | 
                  | 
                மெலிவடைந்த தாவரம் | 
                  | 
                மெலிவடைந்த கணு | 
                  | 
                பாதிக்கப்பட்ட வயல்  | 
               
              | 
           
          
            
              
                நோய்க் காரணி:  
                  
                    - நோய் காரணிகள்       இனக்கலப்பு முறையால் பூசண வித்துக்களை அஸ்கஸ் எனும் பைக்குள் உருவாக்கிறது.
 
                    - ஆஸ்கஸ் நீள் உருளை வடிவமாகவும், உந்துருள்       வடிவமாகவும், மேல்புறம் தட்டையாகவும் 90-102 x 7-9 மைக்ரோ மீட்டர் அளவு கொண்டது.       அவை 4-6 பூசணவித்துக்களுடையது. ஆனால் அரிதாக 8 பூசண வித்துக்களையும் கொண்டிருக்கும். 
 
                    - பூசண இழைகள்       கிளைகளுடனும், தடுப்புச் சுவருடனும், காணப்படும். மேலும் பூசணங்கள் நுண் பூஞ்சை       இழை சிதில்கள் மற்றும் பெரும்பூஞ்சை இழை சிதில்களைக் கொண்டிருக்கும். இவை நுண்       மற்றும் பெரும் பூசண இழைகளை உருவாக்குகிறது.
 
                    - இழை முடிச்சுகள்       80 x 100 மைக்ரோ மீட்டர் அளவுடையது. இவை வட்டமாக கரு நீள நிறமுடன் காணப்படும்.       இலைத்துளைகள் ஏறக்குறைய மஞ்சளாக, பழுப்பு நிறமாக அல்லது ஊதா நிறமாகவும் இருக்கும்.
 
                    | 
                 
              
                கட்டுப்பாடு: 
                  
                    - சுத்தமான       விதைகளைப் பயன்படுத்தவேண்டும். உப்பு நீரைப் பயன்படுத்தி எடைகுறைவான நோய் தாக்கப்பட்ட       விதைகளை விதைக்குவியலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.
 
                    - விதைகளை       விதைக்கும்முன் திரம் 4       கிராம்/கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம் 2 கிராம்/கிலோ விதை என்ற அளவில்       கலந்து விதை நேர்த்தி செய்யவும் 
 
                    - தியோபனேட்மிதைல்,       அல்லது பெனோமைல் போன்ற பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                     
   | 
               
              | 
           
               
  |