தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - ஒவ்வொரு       தனி தானியமும் மஞ்சள் நிற கனியுடலாக மாற்றம் அடைந்து காணப்படும்.
 
                - நோய் தாக்கப்பட்ட       தானிய நெல்லில் மென்பட்டுத் துணி போன்ற தோற்றத்துடன் பச்சையான கருப்பு நிற நெற்பழ       உருண்டைகள் காணப்படும்.
 
                - முதலில்       இந்த உருண்டைகள் மிகவும் சிறியதாகவும் பின் வளர்ச்சியடைந்து 1 செ.மீ அளவு வரை       பெரிதாகிறது.
 
                - இவை நெல்       உமிக்களுக்கிடையே காணப்படும் பூப்பகுதிகளை சுற்றியும் காணப்படும். கதிரிலிருக்கும்       சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டிருக்கும் மற்ற அனைத்தும் நல்ல மணிகளாகவே இருக்கும்.
 
                - பூசண வளர்ச்சி       தீவிரமாகும்போது, நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறமாக மாறி பின் மஞ்சளான       பச்சை அல்லது கரும்பச்சை       நிறத்திலும் மாறிவிடுகிறது.
 
                - பொதுவாக       இனப்பெருக்க நிலை மற்றும் பயிர் முதிர்ச்சி நிலைகளில்       இந்நோய், தாக்கப்பட்டு கதிரிலுள்ள சில தானியங்களை மட்டும் தாக்கி மற்ற தானியங்களை       நல்ல தானியங்களாகவே விட்டுவிடுகின்றன.
 
               
              நோய் வளர்ச்சிக்கு சாதகமான நிலைகள்: 
            
                - மழை மற்றும்       அதிக ஈரப்பதம்
 
                 - அதிக தழைச்சத்துத்       தன்மை கொண்ட மண்.
 
                 - அதிக காற்று       இருப்பதினால், ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு பூசண வித்துக்கள் எளிதில்       பரவுகின்றன.
 
                 - இழைமுடிச்சுக்கள்       மற்றும் இழைவித்துக்களைப் போல் பூசணங்கள் குளிர்காலத்தில் உயிர்பிடித்திருத்தல்.
 
                 - நெற்பயிர்       பூத்தல் பருவம்.
 
              | 
          
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                பாதிக்கப்பட்ட தாவரம்  | 
                  | 
                மஞ்சள் நிறகனியுடல் | 
                  | 
                தானியத்தில் பூஞ்சை தொகுப்பு | 
                  | 
                  | 
                  | 
               
              | 
          
          
            
              
                நோய்க் காரணி: 
                  
                    - பூசணவித்து       உருண்டைகளில் பூசண இழை வித்துக்கள் உருவாகும். சிறிய பூசண வித்துக்காம்புகளின்       மேல் பக்கவாட்டில் உருவாகிறது. பூசண இழைவித்துக்கள் உருளை வடிவத்திலிருந்து நீள்       உருளைவடிவமாகவும், பரு போன்றும் 3-5 x 4-6 மீட்டர் அளவிலும் காணப்படும். இளம்       பூசண வித்துக்கள் சிறியதாகவும், நிறம் வெளுத்தும் மென்மையாகவும் இருக்கும்.
 
                    - சில பச்சை       பூசண வித்து உருண்டைகள் ஒன்று முதல் நான்கு இழைமுடிச்சுக்களை உருவாக்குகிறது.       இவ்விழை முடிச்சுக்கள் வயலில் குளிர்காலத்தில் நன்கு உயிர்பிடித்து தொடரும் கோடைக்காலத்தில்       அல்லது இலையுதிர்க்காலத்தில் காம்புடைய பாய் பூசனத்தை உருவாக்குகிறது.
 
                    - பூசண இழைமுடிச்சுகளில்       இருந்து உருவாகும் இழைவித்துகள்தான் முதன்மை நிலை தாக்குதலை உருவாக்குகிறது எனக்       கண்டறியப்படுகிறது.
 
                    - இரண்டாம்       நிலை நோய் தாக்குதலில் உறக்கநிலை பூசண இழை வித்துக்கள் நோய்ச் சுழற்சியில் முக்கியப்       பங்கு வகிக்கிறது.
 
                    | 
                 
              
                கட்டுப்பாடு: 
                  
                    - நோயைத்       தாங்கக் கூடிய அல்லது எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
 
                    - நெற்பயிர்கள்       ஈரமாக இருக்கும்போது வயலில் உழவியல் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
 
                    - தாமதமாகப்       நடப்பட்ட பயிர்களைக் காட்டிலும் முன் நட்ட பயிர்களில் குறைந்த நெற்பழ உருண்டைகளே       காணப்படுகின்றன.
 
                    - அறுவடையின்போது       நோய் தாக்கப்பட்டச் செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
 
                    - மாற்று       பயிர்களை அழிப்பதற்கு, வயல் வரப்புகள் மற்றும் பாசன வாய்க்கால்களை சுத்தமாக வைத்தல்       வேண்டும்.
 
                    - மிகுதியான       தழைச்சத்து உரம் அளித்தலை தவிர்க்க வேண்டும்.
 
                    - குளிர்ப்பருவத்தில்       நோய்த் தாக்கத்தை முறையாகக் கண்காணிப்பது மிகவும் அவசியம்.
 
                    - வைக்கோல்       மற்றும் பயிர்த்துார்களை அகற்றி அழித்தல் வேண்டும்.
 
                     
                  
                    - நோயற்ற       விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
 
                    - ஒரு கிலோ       விதைக்கு 2.0 கிராம் என்ற அளவில் கார்பன்டசிம் உடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
 
                    - பூச்சிக்களைக்       கட்டுப்படுத்துதல்.
 
                    - தழைச்சத்து       உரத்தை பிரித்து அளிக்கவேண்டும்.
 
                    - நோய் தாக்கப்பட்ட       பயிர் துார்களை அகற்றி அழிக்கவேண்டும்.
 
                     
                  
                    - கதிர்       இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு காப்பர் ஆக்சிஃகுலோரைடு 2.5 கிராம்/லிட்டர் அல்லது புரோபிகோனசோல் 3 மிலி/லிட்டர்       ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
 
                     
  | 
                 
              | 
          
          
            
              
                இரசாயன முறை: 
                  
                    - கதிர் இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு      “காப்பர் ஆக்சிஃலோரைடு 2.5 கிராம்/லிட்டர்” அல்லது “ப்ரோபிகோனசோல்” 10 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
 
                    - கார்பென்டசிம் (2.0 கிராம்/கிலோ விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய      வேண்டும்.
 
                    - துார்விடும் பருவம் மற்றும் பூத்தல் முன் பருவங்களிலும் கார்பென்டசிம் மற்றும் தாமிரம் சார்ந்த பூசணக் கொல்லிகளை தெளிக்கவேண்டும். 
 
                      | 
               
              |