| பயிர் பாதுகாப்பு  :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
            
              | பாக்டீரியா இலைக்கருகல் நோய்: சேந்தோமோனாஸ் ஒரைசே | 
             
           
         
       
        
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இலைப்பரப்பின்       மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள்       அலை வடிவ ஓரத்துடன் மாறும்.
 
                   - இலைகளில்       வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது தங்கநிற மஞ்சள் நிறத்தில்       காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியிலிருந்து இலைகள் காய்ந்தும் பின் சுருண்டும்,       இலை நடுநரம்பு பழுதடையாமலும் காணப்படும்.
 
                   - அதிகாலை       நேரங்களில் இளம்புள்ளிகளின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல்       காணப்படும்.
 
                   - தீவிர       தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்துவிடும்.
 
                   - 60% வரை       தானிய மகசூல் இழப்பு ஏற்படும்.
 
                - நோய்       வளர்ச்சிக்கு சாதகமான காரணிகள்:
 
                   
                     - களைகளின்        இருப்பு.
 
                     - நெற்பயிர்        துார்கள் மற்றும் தாக்கப்பட்ட கட்டைப் பயிர்கள்.
 
                     - நெற்பயிரிலும்        மற்றும் பாசன வாய்க்காலிலும் நுண்ணுயிர் தாக்கம்.
 
                     - சூடான        வெப்பநிலை (25-30 செ), அதிக ஈரப்பதம், மற்றும் மழை.
 
                     - அதிக        காற்று வீசினால் காயங்களை ஏற்படுத்தும் மற்றும் மிகுந்த உரமளித்தல் பாசன நீர்        மற்றும் சிதறல் அல்லது காற்றுடன் கலந்த மழை ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு        பயிருக்கு நுண்ணுயிரிகளை பரப்புகிறது.
 
                     - நடவு        செய்வதற்கான சீராக்கும் கருவி மற்றும் அதனை நடவின் போது கையாளும் விதம் ஆகியவை கூட புதிய தாக்குதல் ஏற்பட        காரணமாய் உள்ளன.
 
                    
                | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                இலையின் ஓரத்தில் அலை போன்ற வெட்டு | 
                  | 
                பாக்டரிய நீர் கசிவு | 
                  | 
                பாதிப்படைந்த பயிர் | 
                  | 
                  | 
                  | 
               
              | 
           
          
            நோய்க் காரணி: 
              
                - உருளையாக,       1.2 x 0.3 - 0.5 மீட்டர் அளவு கொண்டது. இவை தனித்தும், சில சமயம் இணைந்தும் காணப்படும்.       ஆனால் தொடர்ந்து இருக்காது.
 
                   - இந்நோய்க்காரணிகள்       கிராம் எதிர் விளைவுடையவை. பூசணவித்துக்கள் உருவாக்கம் இன்றியும் கனி அறை இன்றியும்       காணப்படும்.
 
                   - ஊட்டச்சத்து       கடற்பாசியில் இருக்கும் கூட்டுயிரிகள் வெளுத்த மஞ்சுள் நிறத்துடனும் வட்ட வடிவத்திலும்,       மென்மையான ஓரத்துடனும், காணப்படும்.
 
                   - இவை குவிந்த       உருவம் மற்றும் ஒட்டும் இயல்புடையது.
 
                | 
           
          
            
              
                கட்டுப்பாடு: 
                  
                    - நோய் தாங்கும்       திறனுள்ள இரகங்களை பயிரிடுதல் (ஐஆர் 20, ஐஆர் 72, பொன்மணி, டிகேஎம் 6)
 
                    - நோயற்ற       விதைகளைப் பயன்படுத்தவும்.
 
                    - தனிமையான       மேட்டுப்பாங்கான சூழ்நிலையில் நாற்றாங்கால்களை       அமைத்தல்.
 
                    - பயிர்       நடவு செய்யும்போது நாற்றுக்கள் கத்திரிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
                    - சரி விகித       உரமளித்தல், மிகுதியான தழைச்சத்து அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
 
                    - கதிர்ப்       பருவத்தில் தழைச்சத்து உரம் அளிப்பதை தள்ளிப் போட வேண்டும். வயலில் நீரை வடிகட்ட       வேண்டும் (பயிரின் பூத்தல் பருவத்தை தவிர). 
 
                    - களைகளை       மற்றும் மாற்று பயிர்களை அழித்தல்.
 
                    - நோய்த்       தாக்கப்பட்ட வயலிலிருந்து நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
 
                    - முறையான       பயிர் இடைவெளியை பாதுகாக்க வேண்டும்.
 
                     
                  
                    - பிளீச்சிங்       பவுடர் (100 கிராம்/லிட்டர், துத்தநாக சல்பேட் (2%) உடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
 
                    - அக்ரிமைசின்       (0.025%), நனையும் செரிசன் (0.05%) உடன் விதை நேர்த்தி செய்து பின் அதனைத் தொடர்ந்து       வெந்நீரில் (52-54° செ) 30 நிமிடங்கள் விதைகளை ஊற வைத்து வெந்நீர் நேர்த்தி செய்யவேண்டும்.
 
                    - செரசன்(0.1%)       என்ற அளவில் 8 மணி நேரம் விதைகளை ஊற வைத்து பின், ஸ்ட்ரெப்டோசைக்லின் (3 கிராம்/லிட்டர்       நீர்) உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                    - 3% வேப்பெண்ணெய்       அல்லது 5% வேப்பங்கொட்டையிலிருந்து எடுத்த சாற்றை தெளிக்க வேண்டும்.
 
                    - பசுமையான       மாட்டுச் சாண சாறை நுண்ணுயிரி அழுகல் நோயைக் கட்டுபடுத்துவதற்காக தெளித்தல்.
 
                    - 20 கிராம்       மாட்டு சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, அதனை படியவிட்டு பின் வடிகட்ட வேண்டும்.
 
                    - நன்கு       வடிகட்டிய திரவத்தைப் பயன்படுத்த வேண்டும். (நோய் முதல் அறிகுறி தோன்றியவுடனும்,       இரண்டு வார கால இடைவெளி விட்டு தெளிக்கவேண்டும்).
 
                     
                  
                    - ஸ்ட்ரெப்டோமைசின்       சல்பேட் + டெட்ராசைக்லின் கலவை 300 கிராம் + காப்பர் ஆக்சிக்லோரைடு 1.25 கிலோ       எக்டர் ஆகியவற்றை கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்குப்       பின் ஒருமுறை இக்கலவையைத் தெளிக்கலாம்.
 
                    - பிளீச்சிங்       பவுடர் @ 5 கிலோ/எக்டர் என்ற அளவில் பாசன நீருடன் கலந்து அளிக்கலாம்.
 
                    - தாமிர       பூசணக் கொல்லிகளை(அ) ஸ்ட்ரெப்டோசைக்லின் (250 பிபிஎம்) உடன் இலைவழி மூலம் அளித்து       இரண்டாம் நிலை நோய் பரவலை தடுக்கலாம்.
 
                     
                  
                   | 
               
              | 
           
               
  |