| பயிர் பாதுகாப்பு  :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
            
              | இலைக்கருகல் நோய் : மைக்ரோடோச்சியம் ஒரைசே | 
             
           
         
       
        
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இலை நுனியிலிருந்து       கீழ்நோக்கி மங்கிய அல்லது கரும்பழுப்பு நிறத்துடன் புள்ளிகள் காணப்படும்.
 
                   - முதிர்ந்த       இலைகளில் வெளிரிய பழுப்பு நிற நீள வடிவமுடைய ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் காணப்படும்.
 
                   - இலைத்தாளில்       பல புள்ளிகள் இணைந்து, பின் இறுதியில் இலைகள் கருகிவிடும்.
 
                   - நோய் தாக்கப்பட்ட       பகுதிகள் காய்ந்து பின் இலைகள் கருகியது போன்று காட்சியளிக்கும்.
 
                   - ஒளி ஊடுருவிச்       செல்லக்கூடிய இலை நுனிகள் மற்றும் இலை ஓரங்கள். நோய் தாக்கப்பட்ட இலை நுனிகளில் நடுநரம்பின்       அருகில் பிளவு ஏற்படும்.
 
                   - குறிப்பாக       அதிக காற்றின் போது இலைநுனிப்பிளவுகள் பெருமளவில் காணப்படும்.
 
                | 
            
              
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                | மங்கிய அல்லது கரும்பழுப்பு நைவுப்புண் | 
                  | 
                நீள் சதுர வடிவ நைவுப்புண் | 
                  | 
                  | 
                  | 
               
              | 
           
          
            
              
                நோய்க் காரணி:  
                  
                      - பூசணத்தின்       மேல்பரப்பில் பூசண இழைச் சிதில்கள் உருவாகின்றன. இவை வில் வடிவத்திலிருந்து நிலா       வடிவமாகவும், இளமையாக இருக்கும்போது ஒற்றை உயிரணு (திசு) கொண்டது.
 
                       - முதிர்ச்சி       நிலையில் 2 உயிரணுக்களுடனும் அவ்வபோது 2-3 குறுக்குச் சுவருடனும் காணப்படும்.       ஆஸ்கஸ் நீள உருளை       வடிவத்திலிருந்து குண்டாந்தடி வடிவமாகவும், ஒருகுமிலுடனும் காணப்படும்.
 
                       - (அஸ்கஸின்       உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் ஏறக்குறைய விறைப்பானதாக இருக்கும். மேலும்       அவை பூசணவித்துக்கள் வெளிவரும்போதும் பிரியாது). அஸ்கோஸ்போர்ஸ்       (பூசண இழைகள்) ஒன்றாக இணைந்தும், நிமிர்ந்தும், சற்று வளைந்தும், 3-5 குறுக்குச்       சுவருடனும் காணப்படும்.
 
                    | 
                 
              
                கட்டுப்பாடு: 
                  
                    - அதிகளவு       உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். 
 
                    - கார்பென்டசீம் கொண்டு விதை நேர்த்தி       செய்யவேண்டும்.
 
                    - மேன்கோசிப்       மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடு, ஆகிய       ஏதாவது ஒன்றை இலைவழி       உரமாக அளிக்கவேண்டும் 
 
                     
   | 
               
              | 
           
               
  |