நூற்புழுவினால் தாக்கப்பட்ட செடியைப் பார்க்கின்ற  தென்படுகின்ற அறிகுறிகளாவன:  
              
                - உயரத்திலும்       பருமனிலும் குறைந்த செடியின் வளர்ச்சி. 
 
                - செடியில்       குறைந்த பக்க கிளைகளின் எண்ணிக்கை. 
 
                - இடைக்கணுவின்       நீளம் குறைவுபடுதல் 
 
                - இலைகள்       பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல் 
 
                - இலை ஓரங்கள்       சிவப்பாகி மேற்புறமாக மடிதல். 
 
                - செடிக்கு       மேலே கிளைகளெல்லாம் ஒன்று கூடி “காலிபிளவர்” போன்ற அமைப்பு உருவாதல் 
 
                - இலை நுனி       வெண்மை நிறமாகி கீழ் நோக்கித் தொங்குதல். 
 
                - உரு சிதைந்த       மொக்குகள் அல்லது பூக்கள். 
 
               
              மேற்கூறிய பாதிப்புகளை செடியைப் பார்த்து அறிந்த போதிலும்  செடியின் வேரையும் சோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அவற்றில் தென்படும்  அறிகுறிகளாவன :  
              
                - சல்லி       வேர்களற்ற கட்டை வேர்கள்
 
                  உதாரணம் : எலுமிச்சை அல்லது நாரத்தை நூற்புழுவினால்  தாக்கப்பட்ட கமலா ஆரஞ்சு  மரத்தின்  வேர்கள்.  
                - பாசி மணி       போன்ற வேர் முடிச்சுகள்
 
                  உதாரணம்: வேர் முடிச்சு நூற்புழுவினால் தாக்கப்பட்ட கேரட்,  மிளகு, இஞ்சி வேர்கள்.  
                - இளம் சிவப்பு       அல்லது கருமையான கீறியது போல உள்ள காயங்கள் அல்லது தழும்புகள். கருகல்       நூற்புழுவால் தாக்கப்பட்ட பீன்ஸ் மற்றும் பட்டாணி வேர்கள். 
                  
 
                 
                - வேரின்       முனைகள் வளர்ச்சி தடைப்பட்டு உப்பிய தோற்றம் அவற்றின் மேல்புறம் பக்க       வேர்கள் உருவாதல். அவையே நாளடைவில் ஹாக்கி ஸ்டிக் போல் வளைந்து காணப்படுதல்.       இதற்கு உதாரணம் புற வேர் நூற்புழுக்களினால் தாக்கப்பட்ட வெள்ளைப் பூண்டின்       வேர்கள். 
 
                 
                - வேரில் மணி       போல் வெண்மை நிறமாகவோ மஞ்சள் நிறமாகவோ பெண் நூற்புழுக்கள் ஒட்டியிருத்தல். 
 
                  உதாரணம் : முட்டைக் கூட்டு நூற்புழுவினால் தாக்கப்பட்ட  உருளைக்கிழங்கு வேர்கள்  
                - வேர்  நூற்புழுவின் தாக்குதலுக்குப் பிறகு,       பூசணங்களின் தாக்குதலினால் வேர்கள் அழுகி விடுகின்ற நிலை.
 
                  உதாரணம்:       நூற்புழுவினால் தாக்கப்பட்ட கருகல் பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு போன்றவற்றின்       வேர்கள். 
              |