பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கடுகு குளவி: அத்தேலியா லூஜென்ஸ் ப்ராக்ஸிமா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • இளம் புழு இலையை உண்டு சேதப்படுத்தும்
  • தாக்கப்பட்ட இலைகளில் சிறிய வளைகள் காணப்படும்
  • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்துவிடும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: பழுப்பு நிறத்தில், உருண்டை வடிவில் இருக்கும். தலையை அடுத்து மார்பு பகுதியில் மூன்று இணைக் கால்களும், வயிற்றுப் பகுதியில் ஏழு இணைக்கால்களும் காணப்படும்.
  • குளவி - தலையும் உடலும் பழுப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுப்பகுதி ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பெண் அந்துப்பூச்சியின் முட்டையிடும் உறுப்பு இரம்பம் போல் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
  • கோடை காலங்களில் நிலத்தை உழவு செய்து கூட்டு புழுக்களை அழிக்கலாம்
  • வயலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • முன் கூட்டியே விதைப்பது சிறந்தது
  • இளம் நாற்றாக இருக்கும் தருவாயில் தண்ணீர் பாய்ச்சுவதால் பூச்சியானது கட்டுப்படுத்தப்படுகிறது.தாக்கப்பட்ட பகுதிகளையும், புழுவையும் சேகரித்து அகற்ற வேண்டும்
  • இயற்கை எதிரியான பெரிலிஸ்ஸஸ் சின்குலேட்டர்யை பேக்டீரியம் சேராட்டி மார்சன்ஸ் பயன்படுத்தி கடுகு குளவியை அழிக்கலாம்
  • பாகற்காய் விதையிலிருந்து பெறப்பட்ட எண்ணெய்யை ஊன்தடுப்பான்களாக பயன்படுத்தலாம்.
  • மாலத்தியான் 1000 மிலி மருந்தை எக்டர்க்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015