பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பிணைக்கும் புழு: குரோசிடோலோமியா பைநோட்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
  • தாக்கப்பட்ட இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிறத் திட்டுகள் காணப்படும்
  • வளர்ச்சியடைந்த புழு காய்களை துளைத்து உட்சென்று உண்ணுகிறது

பூச்சியின் அடையாளம்:

  • புழு: பழுப்பு மஞ்சள் நிறத்தில் காணப்படும்,புழுவின் மேற்பரப்பில் கருப்பு புள்ளிகள் காணப்படும்.
  • அந்துப்புச்சி: அந்துப்புச்சி பழுப்பு மஞ்சள் நிறத்தில் காணப்படும் முன் இறகானது சிவப்பு நிறத்துடன் ஆங்காங்கே சிறு வெள்ளை புள்ளிகள் காணப்படும் –பின் இறகானது கரும் சாம்பல் நிறத்துடன் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • பாசலான் 35 EC @ 2 மி.லி/லி
    • பென்வேல்ரேட் 20 EC @ 0.5 மி.லி/லி
35

புழுக்களால் தாக்கப்பட்ட இலை

அந்துப்புச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015