மா தண்டு துளைப்பான்: பேட்டோசீரா ருஃபோமேக்கலேட்டா 
              தாக்குதலின்  அறிகுறிகள்: 
              
                - புழுக்கள் மரத்தைக் குடைந்து உள்ளே சென்று  சேதப்படுத்துகிறது.
 
                - துளைக்கப்பட்ட பகுதியின் கீழே மரத்தைச்சுற்றிலும்  மரத்தூள்களும் புழுவின் கழிவுகளும் காணப்படும்.
 
                - புழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று  உணவுக்கடத்தும் திகலை உண்பதால் மரக்கிளைகள் வாடிவிடும்.
 
                - சேதம் அதிகமாகும் நிலையில் முழுமரமும்  அழிந்து போகும்.
 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - புழு - வளர்ச்சியடைந்த புழு 10-15 செ.மீ  நீளமுடையது, தலை பழுப்பு நிறத்தில் காணப்படும். புழுவின் முன்பகுதி அகன்றும் உடல்பகுதி  சிறுத்தும் காணப்படும்.
 
                - வண்டு - நன்கு வளர்ச்சியடைந்த வண்டு  பெரியதாகவும் கடினமான முன் இறக்கைகளை கொண்டிருக்கும். சிகப்பு நிற புள்ளிகள் முன்  இறக்கையில் காணப்படும்.
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறை: 
              
                - சேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி  விட வேண்டும்.
 
                - பூச்சி எதிர்ப்புத்திறனுடைய மர ரகங்களை  பயிரிட வேண்டும் (நீலம், கிமாயூதீன்).
 
                - வண்டு உண்ணக்கூடிய மாற்று பயிர்வகைகளை  அகற்ற வேண்டும்.
 
                - வண்ணம் பூசுதல் 20 கி காப்பரில் பவுடரை  1 லி தண்ணீரில் கலந்து மரத்தின் அடியிலிருந்து 3 அடி உயரத்தில் வண்ணம் பூச வேண்டும்.  இதனால் பெண் வண்டின் முட்டையிடும் தன்மை தடுக்கப்படுகிறது.
 
                - சேதம் அதிகமாகும் தருவாயில் காப்பர்  ஆக்ஷிகுளோரைடு பசையை மரத்தின் அடிப்பாகத்தில் தடவ வேண்டும்.
 
                - வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து  புழுவை அகற்றி பின்பு மோனோகுரோட்டாபாஸ் 10 லிருந்து 20 மிலி வரை எடுத்து பாதிக்கப்பட்ட  துளையினுள் செலுத்த வேண்டும்
 
                - கார்போபீயூரான் குருணை மருந்தை ஒரு  துளைக்கு 5 கி வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்த துளையை அடைத்து விட வேண்டும்.
 
              |