இலைப்பிணைக்கும் புழு: ஆர்த்தேகா எக்ஷிவினேசியா 
  தாக்குதலின்  விபரம்: 
              
                - புழுக்கள் மெல்லிய நூலிழையினால் அடுத்தடுத்த  இலைகளை பிணைத்துக் கொண்டு உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்ணும்.
 
                - இலைகள் காய்ந்து விழுந்துவிடும்.
 
                - தாக்கப்பட்ட இலைகளின் நரம்புகள் மட்டுமே  காணப்படும்.
 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - புழு - பச்சை நிறமுடையது தலை பழுப்பு  நிறத்திலும் இருக்கும்.
 
                - அந்துப்பூச்சி - பழுப்பு நிறத்திலும்  முன் இற்ககையில் வரிவரியாக கோடுகள் காணப்படும்.
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறை: 
              
                - பாதிக்கப்பட்ட இலைகளை புழு மற்றும் கூட்டுப்புழுவுடன்  சேர்த்து அகற்றி விட வேண்டும்.
 
                - கார்பரில் 50 சதம் குருணை மருந்தினை  2 கிராம் + 1 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
 
                - பாரனியா லேக்டிசின்டா, ஒசிமா போன்ற  இயற்கை எதிரிகளை பயன்படுத்தி இலைப்பிணைக்கும் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
 
              |