|                சார்கோல்  தண்டு முதல் நோய்: மேக்ரோபோமினா பேசியோலினா 
              
                - இந்நோயை  ஜம்மு மற்றும் காஷ்மீர், மேற்கு வங்காளம், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி, உத்திரபிரதேசம்,  மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பரவுயுள்ளது.
 
               
              அறிகுறிகள்: 
              
                - செடி  பூத்து 1-2 வாரங்கள் கழித்து இந்நோய் தோன்றுகிறது. வெளி இடைக்கணுவின் கீழ்பகுதி வெளில்  மஞ்சள் நிறமாக மாறுகிறது. 
 
                - இடைக்கணுவின்  முளைக்கும் பகுதி மிகவும் மோசமாக அழுகி இருக்கும்.
 
                - நோய்க்கான  காரணி நாற்றாங்கால் பயிரின் வேரினுள் நுழைந்து விடுகிறது. செடி அடையும் போது தண்டின்  உள்பகுதி கருப்பு நிறமாக மாறியும் உதிர்ந்தும் காணப்படுகிறது.
 
                - இவ்வகையான  அறிகுறிகள் தண்டின் கீழ்ப்பகுதியில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தை உற்று பார்த்தால்  அதில் சிறிய கருப்பு நிறமுடைய நோய்க்கான காரணியை தோற்றுவிக்கும் ஸ்கிளிரோஷியா காணப்படுகிறது.
 
                - இந்நோய்க்கான  காரணி தானியத்தின் மேல்பகுதியை பாதித்து அதை கருப்பாக்குகிறது.
 
                - மண்ணின்  வெப்பநிலை அதிகமாக இருந்தால் மற்றும் குறைவான ஈரப்பதம் 
 
               
              கட்டுப்பாடு: 
              
                - பூக்கும்  நேரத்தில் குறைவான தண்ணீர் கிடைப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. எனவே அதை தவிர்க்கவும்.
 
                - டிரைக்கோடெர்மா  விரிடியை தொழு உரத்துடன் 2.5 கிலோ / எக்டர் என்ற அளவில் பொடலாம். (பத்து நாட்களுக்கு  முன் கலந்து வைத்து பின்னர் போடலாம்).
 
                | 
             
               |