பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்

தத்துப்பூச்சி: பைரில்லா பெர்புஸில்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறத்தில் தோன்றும்
  • இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்
  • மேற்பகுதியில் உள்ள இலைகள் காய்ந்தும், பக்கவாட்டில் மொட்டுகள் முளைக்கத் துவங்கும்

பூச்சியின் விபரம்:

  • குஞ்சுகள்: ஆரஞ்சு நிறத்திலும், குஞ்சுகளின் பின்பகுதியில் வால் போன்ற அமைப்பு காணப்படும்
  • தத்துப்பூச்சி:  வளர்ந்த தத்துப்பூச்சி மஞ்சள் நிறத்திலும் கூரிய மூக்குடனும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • தேவைக்கு அதிகமான பசுந்தாழ் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
  • விளக்குப் பொறி அமைத்து தத்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
  • நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை உரிப்பதன் மூலம் குஞ்சுகளையும் முட்டைகுவியலையும் அழிக்கலாம்
  • முட்டைப்புழு ஒட்டுண்ணியான எப்ரிகிரேனியா மெலனோலூகா எக்டருக்கு 8000-10,000 குஞ்சுகள் (அ) 8-10 இலட்சம் வீதம் வெளியிட்டு தத்துப்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்
  • கீழ்காணும் மருந்தினை 150வது மற்றும் 210வது நாளில் தெளிக்கலாம்
    • மாலத்தியான் 50 EC 2000 மி.லி

 

 

 

முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015