பயிர் பாதுகாப்பு :: லில்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பேன்: திரிப்ஸ் ஸிம்பிளக்ஸ்

அறிகுறிகள்:

  • லில்லி பூக்கள், குமிழ்கள் உருமாறி, நிறம் மாறியிருக்கும்.
  • பூக்கள் மற்றும் மொட்டுக்கள் மூடியிருக்கும் (அ) ஒழுங்கற்ற முறையில் திறந்திருக்கும்.
  • தாக்கப்பட்ட பரப்புக்கள் எப்பொழுதும் போல் பளபளப்பாக இல்லாமல், வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில் காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை – வெள்ளை நிறத்தில், மென்மையாக, பீன்ஸ் வடிவத்தில் இலை திசுக்கள் மற்றும் கிழங்குகளில் படிந்திருக்கும்.
  • பூச்சி – பால் – வெள்ளை நிறத்தில், தோன்றி பின் பழுப்பு நிறமாக மாறும்.
  • இறக்கைகளின் அடிப்புறத்தில் மாறுப்பட்ட வரிகள் இருக்கும்.

கட்டுப்பாடு:

  • பூக்கள் உருவாகும் சமயத்தில் மீத்தைல் பாரத்தியான் 1 மிலி தெளித்தல்.
  • கிழங்குகளை லிண்டேன் மருந்தை சேமிப்பதற்கு முன் தூவி நேர்த்தி செய்ய வேண்டும்.
  • மோனோகுரோட்டாபாஸ் உடன் நேர்த்தி செய்து 190° செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக வைத்து சேமித்தல்.
  • தாக்கப்பட்ட குமிழ்களை மீத்தைல் ப்ரோமைடு உடன் புகையூட்டம் செய்தல் (அ) சுடு நீரில் 43.9° செல்சியஸ் வெப்பநிலையில் முக்கி எடுக்க வேண்டும்.
  • திம்மிட் 4-10 கிலோ/ஹெக்டர் மண் அளிப்பு செய்தல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015