| பயிர் பாதுகாப்பு  ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  1. காய்த்துளைப்பான்:  ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா  | 
                 
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இளம் புழு இலைகளையும்,      நுனிக்குருத்துகளையும் தாக்கி சேதப்படுத்தும்
 
                      - வளர்ச்சியடைந்த புழு      காய்களைத் துளைத்து உட்சென்று திசுவை உண்கிறது
 
                      - சேதம் அதிகமாகும் நிலையில்,      புழு மொக்கு முழுவதையும் உண்டு சேதப்படுத்தும்
 
                     
                      
                        பூச்சியின் அடையாளம்: 
                          
                            - முட்டை: வெள்ளை நிறமாக      இருக்கும், மற்றும்      முட்டை தனித்தனியாக இடப்பட்டிருக்கும் 
 
                            - புழு: பச்சைக் கலந்த பழுப்பு      நிறத்தல் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்
 
                            - கூட்டுப்புழு: பழுப்பு நிறமுடையது,      மண்,இலை      மற்றும் காய்களில் காணப்படும் 
 
                            - அந்துப்பூச்சி: பழுப்பு கலந்த மஞ்சள்      நிறத்தில் இருக்கும். . முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு      நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும். பின் இறக்கைகள்      இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
 
                           
                           | 
                         | 
                       
                     கட்டுப்படுத்தும் முறை:
                    
                      - கோதுமை அல்லது வார்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலாம்
 
                      - ஊடு பயிராக கொண்டை கடலையை பயிர் செய்யக் கூடாது
 
                      - தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
 
                      - Ha NPV வைரஸ் 250-300 புழு கரைசல்/எக்கடர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்இயற்கை எதிரிகளான காம்போலிடிஸ் குளோரிடே, எனிகோஸ்பில்லஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
                      - சேதம் அதிகமாகும் நிலையில் மோனோகுரோட்டபாஸ் 750 மிலி மருந்தை எக்டர்க்கு 800 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்
 
                      | 
                 
                | 
           
         
  |