| பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
                மொட்டுக் கருகல்  நோய் : நிலக்கடலை, மொட்டுக் கருகல் வைரஸ் (பிபீஎன்வி) 
              அறிகுறிகள்
            
              - இளம்  இலைகளில் வெளிர் பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றி (வளையப் புள்ளிகள்) கோடுகளாக மாறுகின்றன.
 
              - நுனியில்  மொட்டுக் கருகல் ஏற்படுகின்றன. (அதிக வெப்பநிலையில்)
 
              - செடிகள்  முதிர்ச்சியடையும் போது சிறிய இடைக்கணுவுடன் மொட்டுக்கள் தோன்றி வளர்ச்சி குன்றி  காணப்படும்.
 
              - இவ்வகையான  நோய்கள் இலைப்பேன் மூலம் பரவுகின்றன.
 
               
            கட்டுப்பாடு 
            
              - குருவை,  சம்பா பருவங்களில் முன் காலங்களில் விதைப்பு மேற்கொண்டால் இந்நோயின் பாதிப்பிலிருந்து  விடுபடலாம்.
 
              - பயிரின்  அடர்த்தியை பெருக்குதல், முன் பருவ காலங்களில் விதைத்தல், கம்புடன் சேர்த்து விதைத்தல்  (கலப்புப் பயிர்) ஆகியன நோய் பரப்பும் நச்சுயிரியைக்  கட்டுப்படுத்தும் முறைகள்.
 
              - நிலக்கடலை,  கம்பு (7:1) என்ற விகிதத்தில் விதைக்கலாம்.
 
              - மானோகுரோட்டாபாஸ்  1.6 மில்லி / லிட்டர் அல்லது டைமீதோயேட் 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தி  நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம்.
 
              | 
              
              
               | 
           
       
  |