| பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
              பின் பருவ இலைப்புள்ளி நோய்க்கு  உள்ள தடுப்புமுறைகள் 
              அறிகுறிகள்  
  - குருவைப்  பருவத்தில் விதைத்த 55-57 நாட்கிளல் அறிகுறிகள் தென்படும். சம்பா பருவத்தில் விதைத்த  42-46 நாட்களில் அறிகுறிகள் தென்படும்.
 
              - வட்டவடிவ  கருப்பு நிறப்புள்ளிகள் இலையின் அடிப்பாகத்தில் காணப்படும்.
 
              - இப்புள்ளிகள்  ஒழுங்கற்ற வடிவிலும், இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து, இலையின் காய்ந்த தோற்றத்தை கொடுக்கும்.  இறுதியில் இலைகள் உதிர்ந்துவிடும்.
 
           
கட்டுப்பாடு 
            
              - கம்பு  மற்றும் சோளத்தை நிலக்கடலையுடன் (1:3) என்ற விகிதத்தில் போட்டால் இலைப்புள்ளி நோய்  குறையும்.
 
              - இந்நோயின்  தாக்குதல், அதிகம் காணப்படும் வயல்களில் மற்றும் பயிராக கம்பு, மக்காச்சோளம், எள்  ஆகியவற்றை பயிரிட்டு நோய் கிருமிகளை அடுத்த பயிருக்கு பரவாமல் தடுக்கலாம்.
 
              - முந்தியப்  பயிரின் கழிவுகளை ஆழமான உழுது, முதல் நிலை நோய்பரப்பும் காரணியைத் தடுக்கவேண்டும்.
 
              - ஒரு  ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர்  தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானால் தெளித்தால் இந்நோயினைக்  கட்டுப்படுத்தலாம்.
 
              | 
              
               | 
           
       
  |