பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தத்துப்பூச்சி: எம்போஸ்கா கெரி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
  • வளர்ந்த பூச்சிகள் விஷத்தன்மையுள்ள உமிழ்நீரை உட்செலுத்துவதால் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள நரம்புகளால் வெண்மையாக மாறி விடுகிறது
  • சேதம் அதிகமாகும் போது பயிர்கள் தீயினால் எரிந்தது போல் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

  • அந்துப்பூச்சி: வளர்ந்த பூச்சிகள் பச்சை நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும்
  • ஊடுபயிராக கம்பை பயிர் செய்வதால் தத்துப் புச்சியைக் கட்டுப்படுத்தலாம்
  • ஆமணக்கு - நிலக்கடலை ஊடுபயிரை தவிர்த்தல் வேண்டும்
  • டைமீத்தோயேட் 650 மிலி மருந்தை ஹெக்டர்க்கு 600 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

 


Groundnut


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015