பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
நிலக்கடலை மொக்குத்துளைப்பான்: அனார்சியா எபிபையாஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு மொட்டுக்களையும், குருத்துக்களையும் துளைத்து உட்சென்று உண்கிறது
  • ஆரம்ப நிலையில் சிறிய துளைகள் இலைகளில் காணப்படும்
  • சேதம் அதிகமாகும் போது அதிக எண்ணிக்கையில் இலைகளில் துளைகள் காணப்படும்

பூச்சியின் அடையாளம்:

  • புழு: சாக்லைட் போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) நொச்சி சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளித்து வளர்ச்சியடைந்தப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்
  • கூட்டுப்புழு ஒட்டுண்ணியான பிராக்கிமெரியாவை பயன்படுத்தி அந்துப்பூச்சியின் கூட்டுப்புழக்களை அழிக்கலாம
Groundnut

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015