| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  |  பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிக்குவா | 
                 
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - இளம் புழு இலையின்      அடிப்பகுதியை தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
 
                    - வளர்ச்சியடைந்த      புழு இலையின் நடுப்பகுதியை விட்டுவிட்டு மற்ற பகுதிகளை உண்டு சேதப்படுத்தும்
 
                   
                  
                    
                      பூச்சியின் அடையாளம்: 
                        
                          - முட்டை: பெண் அந்துப்பூச்சி      இலைகளின் அடிப்புறத்தில் முட்டைக் குவியல்களாக இடும்
 
                          - புழு: ஆரஞ்சு நிறத்தில்      இருக்கும். உடலின் இரண்டு ஓரங்களிலும் மஞ்சள் நிற முடிகள் காணப்படும்
 
                          - கூட்டுப்புழு: உதிர்ந்த ரோமங்களை கொண்டு கூடு கட்டி அதனுல் இருக்கும் 
 
                          - அந்துப்பூச்சி: ஆரஞ்சு நிறத்தில்      இருக்கும். முன் இறக்கை பழுப்பு நிறமாகவும் இரண்டு கரும்புள்ளிகளைக் கொண்டிருக்கும்
 
                          | 
                       
  | 
                       
                 
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    - கோடைக்காலங்களில்      நிலத்தை உழவு செய்து ரோமப் புழுவின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
 
                    - ரோமப்புழு உண்ணக்கூடிய      மாற்று பயிர் வகைகளையும் களைகளையும் சேகரித்து அகற்றிவிட வேண்டும்
 
                    - தட்டைபயிறு, ஆமணக்கு      மற்றம் காட்டாமணக்கு ஆகிய பயிர்களை வயலின் வரப்புகளில் கவர்ச்சி பயிராக பயிரிட்டு      ரோமப்புழுவை சேகரித்து அழிக்கலாம்.
 
                    - கைகலால் சேகரித்து அழிக்க வேண்டும்
 
                    - கேலோட்டோரோபிஸ், காட்டமணக்கு மற்றும் ப்பபாளி கிளைகளை வயிலில் வைத்து ரோமப்புழுவை கவர்ந்தியிலுத்து அழிக்கலாம்.
 
                    - இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி, வெட்டுகிளி, எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள் ,பரக்கானிட் ஒட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
 
                    - நுண்ணுயிர் பூச்சிக்கொல்லி      மருந்துகளை நீயுக்ளியார் பரலிஹெகட்ரோசிஸ் வைரஸை எக்டர்க்கு 500 வைரஸ் தாக்கிய      புழுக்களிலிருந்து பெறப்படும் வைரஸ் நச்சு என்ற முறையில் தெளித்து இளம்புழுக்களை      நன்கு கட்டுப்படுத்தலாம்.
 
                    - பூச்சியின் தாக்குதல்      பொருளாதார சேதநிலையைத் தாண்டும்பொழுது குயினால்பாஸ் 2 மிலி (அ) குளோர்பைரிபாஸ்      2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து இளம் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
 
                  | 
                 
              | 
           
         
         
 |