| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | சுருள்பூச்சி: அப்ரோஏரிமா மோடிசெலா | 
                 
              
                தாக்குதலின் அறிகுறிகள்: 
                  
                    - புழு இரண்டு அல்லது      மூன்று இலைகளை ஒன்றாக பிணைத்துவிடும்
 
                    - புழு இலையின் திசுக்களுக்கிடையே      ஊடுருவிச் சென்று பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
 
                    - தாக்கப்பட்ட இலைகள்      காய்ந்துவிடும்
 
                    - சேதம் அதிகமாகும்      நிலையில் தாக்கப்பட்ட பயிர்கள் தீயினால் எரிக்கப்பட்டது போல் காணப்படும்
 
                     
                  பூச்சியின் அடையாளம்: 
                  
                    - முட்டை:  வெள்ளை நிறமுடையது, பெண் அந்துப்பூச்சி இலையின்      அடிப்புறத்தில் முட்டையைக் குவியல்களாக இடும்
 
                    - புழு: பச்சை நிறமாகவும்,      கருமை நிறத்தலையையும் கொண்டிருக்கும்
 
                    - அந்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில்      இருக்கும், முன்னிறக்கையில் வெண்ணிற புள்ளிகளைக் கொண்டிருக்கும்
 
                    | 
                  
                 | 
                 
              
                கட்டுப்படுத்தும் முறை: 
                     
                    பொருளாதார சேத நிலை: 1 புழு/ மிட்டர் வரிசை  
                  
                    - விளக்குக்கவர்ச்சி      பொறியை எக்டர்க்கு 12 வீதம் அமைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
 
                    - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
                      
                        - டைமீத்தேயேட் 30 EC 660 மி.லி/ஹெக்டேர்
 
                        - மாலத்தையான் 50 EC 1.25 மி.லி/ஹெக்டேர்
 
                        - மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி/ஹெக்டேர்
 
                       
                     
                                      | 
               
            | 
           
         
         
 |