| பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             
 மஞ்சள்       தேமல்நோய்: முங்பீன் மஞ்சள்
              
                
                  அறிகுறிகள்
                    
                  
                    
                      - முதலில்       லேசான மஞ்சள் நிறப்புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றுகின்றன. இச்சிறிய புள்ளிகள்       அளவில் பெரியதாகி சில இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட       இலைகளில் இறந்த செல்களை உடைய திசுக்கள் காணப்படுகின்றன.
 
                      - நோயினால்       பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சியின்றியும், மெதுவாகவும் முழுமையடைகின்றன மற்றும்       சிறிய பூக்களையும் காய்களையும் தோற்றுவிக்கின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட       செடிகளின் காய்கள் அளவில் குறைந்தும் மஞ்சள் நிறத்திலும் மாறுகின்றன.
 
                      - இந்நோய்       பெமிசியா டெபசி எனப்படும் வெள்ளை ஈயினால் கடத்தப்படுகிறது.
 
                     
                  கட்டுப்பாடு 
                  
                    - சோளத்தை       வரப்புப்பயிராக வரிசையில் விதைக்கவேண்டும்.
 
                    - விதையை       இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூ எஸ் 5 மில்லி / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து       நோய் பரப்பும் நச்சுயிரியை அழிக்கவேண்டும்.
 
                    - இவ்வைரஸினால்       பாதிக்கப்பட்ட செடிகளை இளம் பருவத்திலேயே களைந்தெரியவேண்டும்.
 
                    - ஊடுருவிப்       பாயும் பூச்சிக்கொல்லி ஏதாவது ஒன்றை இலைகளில் டைமீதேயேட் 750 மில்லி / எக்டர்,       விதைத்த 30 நாட்கள் கழித்து தெளிக்கலாம்.
   | 
                    
                     | 
                 
                | 
           
         
  |