மேக்ரோபோமினா இலைக்கருகல்: மேக்ரோஃபோமினா ஃபேசியேலினா 
அறிகுறிகள் 
            
              - நெல்லை       தொடர்ந்து பயிரிடப்படும் பாசிப்பயிரில் விதைத்த 4 வாரத்தில் இந்நோய் தோன்றுகிறது.       கீழ்த் தண்டுப்பகுதியில் வெள்ளை நிறப்பூசண வளர்ச்சி காணப்படும்.
 
              - இவ்வகையான       பூசண வளர்ச்சி அதிகமாகி இவை உயர்ந்த வரிக்கோடுகளாக மாறி மேல்நோக்கி பரவுகிறது.
 
              - செடிகள்       குட்டையாகவும், இலைகள் அடர்ந்த பச்சை நிறத்திலும், இலையின்  அளவு குறைந்தும் காணப்படும்.
 
              - பாதிச்       செடிகளில் இலைகள் உதிர்ந்து விடும்.
 
              - செடியில்       பூத்தலும், காய்த்தலும் குறைந்துவிடும்.
 
              - நோயினால்       பாதிக்கப்பட்ட செடியின் தண்டைப் பிளந்த பார்த்தால் சிவப்பு நிறத்தில் திசுக்களும்,       உள்திசுக்கள் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
 
              - நோய்க்காரணி       விதையிலும், மண்ணிலும், நோயுற்ற செடிகளிலும், தங்கியிருக்கும்.
 
              - வெப்பநிலை       அதிகரிக்க நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
 
              - மண்ணின்       மேல் தளத்தில் பூசண வித்துக்கள் தங்கியிருக்கும் இவை தண்டின் மூலம் உள்ளே நுழைகின்றன.
 
             
            கட்டுப்பாடு 
            
              - கோடையில்       ஆழமாக உழவேண்டும்.
 
              - பயிர்       சுழற்சி முறையை கடைப்பிடிக்கவேண்டும்.
 
              - மண்ணில்       தொழு உரம் அதிகமாக இருந்தால் நோயின்தாக்கம் குறையும்.
 
              - நோயுற்ற       செடியை அழித்தால் நோயின் தாக்கம் குறையும்.
 
              - விதையை       டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ அல்லது சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம்       / கிலோ அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் பயன்படுத்தி       நேர்த்தி செய்யலாம்.
 
              - கார்பன்டாசிம்       2 கிராம் / லிட்டர் அல்லது சூஃப்ளூரசன்ஸ் அல்லது டி.விரிடியை 2-5 கிலோ / எக்டர்       என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.
 
                          | 
              |