அடிச்சாம்பல் நோய்: ஸ்கிலிரோஸ்போரா கிராமினிகோலா 
              அறிகுறிகள்:  
              
                - நோயினால் பாதிக்கப்பட்ட  செடிகளில் கதிர்கள் வெளிப்படுவதில்லை. அவ்வாறு வெளிப்பட்டாலும்  கதிர் முழுவதுமோ அல்லது கதிரின் ஒரு பாகமோ தானியங்களுக்குப் பதிலாகப் பசுமையான நீண்ட  சிறிய இலை போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும். ஆகவே கதிர்கள் தானிய மணி  பிடிப்பில்லாமல் மலடாக இருக்கும்.
 
                - பூவிலுள்ள பகுதிகள் அனைத்தும் சிறிய இலைப்போன்ற பகுதிகளாக மாற்றப்படுகின்றன. 
 
                - கதிர்களில் தானியங்களுக்குப்  பதிலாகப் பசுமை நிறத்தில் சிறுசிறு இலைப்போன்ற பாகங்கள் காணப்படுவதால் இந்நோய் “பசுங்கதிர்  நோய்” என்று அழைக்கப்படுகிறது.
 
               
              
கட்டுப்பாடு: 
              
                - நோய்       எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான கோ 7. டபிள்யூ சிசி - 75.
 
                - நாற்றுப்       பறித்து நடவு செய்தால் நோயின் தாக்கம் குறையும்.
 
                - பாதிக்கப்பட்ட       பயிரை நடவு செய்யும் போது பிடுங்கி எறியவும்.
 
                - நேரடி       விதைப்பு வயலில் பாதிக்கப்பட்ட பயிரை விதைத்த 45 வரை களைந்தெறியவேண்டும்.
 
                - விதைகளை       மெட்டாலக்சில் 6 கிராம் / கிலோ என்ற அளவிலும் அதனைத் தொடர்ந்து மெட்டாலக்சில்       500 கிராம் அல்லது (ரிடோமில் எம்இசட் 4 கிலோ / எக்டர் அல்லது மேங்கோசெப் 1       கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்).
 
                |